Skip to main content

தள்ளுவண்டிச் சுடுமணலில் வறுபடும் வேர்கடலையாய் என்னிலை - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #8

Published on 26/10/2019 | Edited on 30/10/2019

அடுத்த நாளைக்கான தேவையை உணரவே இன்றைய நாளின் இறப்பு தேதியைக் கிழிக்கும் போதே நேற்று புத்தகப்பையின் அடியில் ஒளித்து வைத்திருந்த டைரி கண்ணிற்குள் வந்து போனது. நிர்மலா என்னும் வெள்ளைத் தேவதையின் நினைவலைகளை சுமந்த அந்த வஸ்துவை பாதி வெறுப்புடனும் மீதி காதலுடன் தழுவின என் விரல்கள். சற்றே சாய்ந்த கிறுக்கலான கையெழுத்து மணமான இந்த ஆறு வருடங்களில் அவள் எப்போது இந்த டைரியை எழுதத் தொடங்கினாள். தாலிச்சரடு மார்பின் குறுக்கிலாட பட்டுச் சேலையோடு என் விரல் பிடித்து கொண்ட மருதாணி விரல்களோடு ஆரம்பித்திருப்பாளா ? அல்லது அத்தை என்னை திட்டிகிட்டே இருக்காங்க என்ற அம்மாவின் மீதான புகார் பட்டியலின் போது தொடர்ந்திருப்பாளா ? அல்லது நான் அப்பாவாகப் போகிறேன் என்று வெட்கி எங்கள் உறவை பசுமையாய் நினைவு கொண்டு வந்தபோது தொடங்கியிருப்பாளா? ஆனால் எழுத்துக்கள் மட்டுமின்றி அவளுக்கும் முற்றும் போடவேண்டியதாகிப் போனதே இதற்கு யார் காரணம் நானா? அல்லது அலைபாயும் மனம் கொண்ட அவளின் தேடல்களா? யோசித்துக் கொண்டேதான் அந்த டைரியை எடுத்து பிரித்தேன்.

அந்த வெள்ளிக்கிழமைக்கு அவள் அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றவில்லை, ஆனால் அவளிற்குத் தோன்றியிருக்கிறது. அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்று தீப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கியதைப் போன்ற வீடுகளில்! அன்றைய காலை அவளின் குளியலறையின் கதவிடுக்கில் இரண்டு கண்களைப் பார்த்ததை பதறியபடி என்னிடம் சொன்னபோது ?! எல்லா கணவனைப் போல எனக்கும் என் மனைவியின் அழகை மேய்ந்தவனின் கண்களை குருடாக்க ரோஷம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்தக் கண்களுக்கு சொந்தக்காரனை நான் கணிக்கத் தவறிவிட்டேன் இவனாக இருக்குமோ அல்லது இவனாக இருக்குமோ என்று கடைசியில் இவளே அழைத்திருப்பாளோ என்று எனக்குள் தீப்பொறிகள். அதன் தகிப்பை என் தலையில் சுமத்திவிட்ட திருப்தியில் அவள் தன் வேலைகளில் ஆழ்ந்து விட்டாள். என் கழுகுப் பார்வையும் மீறி அந்த கண்களை அவளே கண்டு பிடித்து விட்டாள்.

 

hjk



அவனா? உச்சகட்டக் கோபத்தில் அடுத்த விநாடியே நான் அவன் முன்னால்....! ஆனால் அடிபட்டு மயங்கியது அவனல்ல, என் சபலம் நுனிநாக்கில் சுர்ரென பரவும் கோப்பைத் திரவத்தின் ஸ்பரிசம். கைகள் பழுக்க இரும்படித்தாலும் கிடைக்காத சொர்க்கம் அவன் கரன்ஸிகளால் என்னைக் குளிப்பாட்டியதை டைரியில் அவள் குறிப்பிட்டிருந்தாள். ச்சீ? என்ற முகச்சுழிப்போடு அவள் என்னை சாக்கடையில் நெளியும் புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்தாள். இரண்டு பிள்ளைகளைப் பெற்றபின்னரும் வனப்பில் சீர் தூக்கியிருக்கும் அவளின் அழகுகளை இன்னொருவன் ரசிக்கிறான் எனில், எனக்கு கோபம் வரவேண்டுமாம். ஆனால் என் நாவு அவனின் பாட்டிலுக்கு அடிமையாகிப் போய்விட்டதே நானே அவனை அழைத்தேன் விருந்திற்கு அவளின் உணவிலும், உடலிலும். சில எச்சில் இரவுகளில் அவளின் தினசரிகள் கழிந்தது ஆனால் அந்த மயக்க நாடகத்தை அவள் உணர்ந்து கொண்டாள் சில நாட்களிலேயே ! முரண்டு பிடித்த அவளின் அங்கங்கள் எல்லாம் என் சிகரெட்டின் சூட்டைப் பரிசாகப் பெற்றுக்கொண்டது. ஏன் இப்படி அடிச்சு சித்திரவதை பண்றே என்வீட்டுக்கு ஒருநாள் கூட்டிட்டு வா நான் பேசிக்கிறேன் என்றான் அவன்.

வர மறுத்தவளை அவனுடன் சுகித்திருந்த அந்தரங்கத்தை காட்டி பணியவைத்து அழைத்துப்போனேன். அங்கு நான் கண்டது.....யாரோ வந்து விட டைரியை மீண்டும் மூடி பரணையில் வீசிவிட்டு நகர்ந்தேன் நான். நிர்மலாவின் டைரி விழித்துக் கொண்டது? ! தொட்டுவிட தொட்டுவிட தொடரும் என்பார்கள். அன்றைய சந்திப்பில் நான் அறியாமலேயே என் உடலைத் தொட்ட அவன் இப்போ நீ ஒண்ணும் பத்தினி கிடையாது. யோசி என்னை அனுசரித்துக் கொண்டால் சகலமும் கிடைக்கும் உனக்கு இல்லையென்றால்? உன் ஒழுக்கம் பத்துபேர் மத்தியில் விமர்ச்சிக்கப்படும், உன் கணவனே அதற்கு ஆதாரங்களை நீட்டுவான். பிள்ளைகள் காரி உமிழ்வார்கள். ஒருமுறை பட்டாலும் சேருதானே விருப்பப்பட்டாயோ படவில்லையோ பூசிக்கொண்டாய். இனி தப்பிக்க முயலாதே ! எச்சரித்தான்.
எனக்கு இணக்கம் வேண்டும் நிர்மலா உன் விரல்கள் எனை தீண்ட வேண்டும் அவன் உனக்கு ஏற்றவன் இல்லை நானிருக்கிறேன் ஆடைகளைத் தாண்டி அங்கங்களைத் தொட நீண்ட அவன் கைகளில் இருந்து நான் விலகினேன் கண்ணெதிரே மனைவியை யாரோ ஒருவன்... என் கணவனின் ச்சீ.... அந்த இடைத்தரகனின் கைகளில் கண்ணாடிபுட்டியின் திரவம் என்னைப் பார்த்து நான் உடைந்துவிட்டேன் நீ ! என்று சிரித்தது.

கண்டிக்க வேண்டியவனே கதவடைத்து விட்டான். இனியார் என்னைக் கேட்பது என்ற அகங்காரம் என்னுள். நான் அறியாமலே மது மயக்கத்தில் என்னை....அனுபவித்தவன். இப்போது பிச்சைக்காரனைப் போல இரைஞ்சுகிறான். அவனின் காலுக்கடியில் இட்ட வேலைகளைச் செய்யும் ஏவலாலாய் புருஷன் இன்னும் அவனை அழுத்த வேண்டும் கண்முன் கிடந்த திரவத்தை தொண்டையில் சரித்துக் கொண்டேன் அதிர்ச்சியில் முதலில் இறங்க மறுத்த திரவம் வழுக்கிக்கொண்டு ஓடியது. சாக்கடைக்குள் சரித்திரம் புதைந்து போனது. ரசிக்கக் கண்கள் இருக்கும் போது அலங்கரிக்க மனம் கூசவில்லை தடையாய் இருந்த தாலிச்சரடும் சாதாரண செயினாக கனம் கூடியபிறகு ஏற்கனவே மின்னிய முகத்தில் வைரமும் மினுக்கியது.

 

 

ln



கூர்வேலாய் குத்திய பார்வைகளை என் பகட்டும் பதவிசும் மறைத்தது. பெளர்ணமி இரவு அன்றுதான் நான் கடைசியாக அவனின் கரங்களில் அகப்பட்டு இருந்தது. அடக்கி அடக்கி வைத்திருந்த உணர்வுகளை ஒழுக்கம் கற்பித்த அன்னையின் குரல்வளையை நெறிக்க வேண்டும் போல் இருந்தது. நான் இப்படி தவறியதற்கு யார் காரணம் என்று யோசனை குமிழிட்டது, எத்தனை பவித்ரமானவளாக இருந்தேன் இன்று பரிதாபத்திற்குரியவளாகிப் போனேனே. என்ன வேண்டும் சின்ன புன்முறுவல், சமையல் அருமை என்ற பாராட்டு மென்மையாய் முத்தமிடல், கரம் பிடித்து கண்களைப் பார்த்து கவிதை பேசிடல் மொட்டைமாடியின் பெளர்ணமி நிலவொளியில் வெற்றுடல் போர்த்தியிருந்த உடல் கணம் இதையெல்லாம் நான் தாலிகட்டியவனிடம் கூட அனுபவித்தது இல்லையே ! ஆனால் எப்படியோ எங்கோ இரண்டு பிள்ளைகளின் தாயாய் என் மனதை கட்டிப் போட்டு இருக்கவேண்டும். சரிந்து விட்டேன். அவனுக்குத் திருமணமாம் நான் என்ன செய்ய ?! எப்பாடு பட்டு கேட்டும் அதற்கு அவன் சம்மதித்து விட்டானாமே ?! கவலைப்படாதே நான் உன்னை ..... எந்த வார்த்தைகளை பெண்ணாகப் பிறந்தவள் கேட்கக் கூடாதோ அந்த வார்த்தைகள், தள்ளுவண்டிச் சுடுமணலில் வறுபடும் வேர்கடலையாய் என்னிலை.

தவறு எங்கிருந்து என்று தொடங்கி எங்கே மடிந்தேன் என்று யோசிக்க நேரம் இருக்கவில்லை, காலைக் கட்டிக் கொண்ட குழந்தையினை கடைசியாய் முத்தமிட்டேன், அம்மா குளிக்கப்போகிறேன் என்று அவனை வெளியே அனுப்பிவிட்டேன். கடைசியாய் ஒரு முறை கட்டியவனையும், கண்டவனையும் கவர்ந்த அந்த உடலை வெறுமையாக்கி கண்ணாடியில் கொடூரமாய் ரசித்தேன் இந்த வெண்தோள்கள் இன்னும் சற்று நேரத்தில் பொசுங்கிவிடும். அந்த பொசுங்கல் அரசல் புரசலான பேச்சுக்களை எல்லாம் அடக்கிவிடும் இந்த ஜன்னல் வழியாகத்தான் அவன் எனக்கு அழைப்பு விடுவான் அங்கேயே அமர்ந்தேன் இப்போதும் அவன் விழிகள் பால்கனியில் இருந்து என்னை ரசித்தது. அகலத் திறந்துவிட்டேன் கண்ணாடியை ! நிதானமாய் மண்ணெய்யை அபிஷேகம் செய்வதைப் போல ஊற்றி நெருப்புக்குச்சிக்கு முத்தமிட்டேன்! நிலைமையுணர்ந்து அவன் வருவதற்குள்..!

அழுகை கூக்குரல் சதை கருகிய வாசம் இவையெல்லாம் தாண்டி உயிர் ஒட்டிக் கொண்டு இருந்தது. கடைசியா நான் போய் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன் அந்தகுரல் காதை எட்டியதும் எனக்குள் சுவாரஸ்யம் எத்தனை முறை அந்த குரலில் காதலின் ஸ்பரிசத்தை உணர்ந்திருப்பேன். அருகில் வந்தான் கருகிய என் உடல் அவனுக்கு எந்தவித அருவெறுப்பையும் தரவில்லை போலும், வெறித்தவன் என் பெண்மையின் மீது இந்தப் பக்கம் இன்னும் கருகாமதான் இருக்கு என்று உதிர்த்த வார்த்தைகளில் பிணம்தின்னிகழுகின் சதைதின்னும் வாசம் இருந்தது?!
 

 

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணைப் படுகொலை செய்த ஆண் நண்பர்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Police arrested the man who incident the woman in Villupuram

விழுப்புரம் மாவட்டம் காவனிப்பாக்கம் அருகே மலட்டாறு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அந்த பகுதியில் ஆடுமாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துவிட்டு விழுப்புரம் தாலுகா போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பெண் யார் என்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட பண்ருட்டி அருகே  உள்ள கரும்பூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் தனது மனைவி வசந்தியை(31) காணவில்லை என்று காவல்நிலையத்தியில் புகார் அளித்துள்ளார். மேலும் , எனது மனைவி வசந்தி விழுப்புரத்தில் உள்ள ஒரு  ஜவுளைக்கடை முதலாளி வீட்டில் வேலை செய்துவருகிறார். வழக்கம் போல வீட்டு வேலைக்கு சென்ற வசந்தி மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அங்கு சென்று விசாரித்தால் வசந்தி வேலைக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். எங்கு தேடியும் கிடக்கைவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மலட்டாறு பகுதியில் எரிந்த நிலையில் கிடைத்த பெண்ணின் உடலை அடையாளம்  காட்ட குப்புசாமியை போலீசார் அழைத்துசென்றனர். அந்த உடலை பார்த்த குப்புசாமி எரிந்த நிலையில் கிடந்த பெண் தனது மனைவி வசந்திதான் என்று உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ் வசந்தியின் தொலைபேசியின் எண்ணை வைத்து அவருடன் பேசிய நபர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

இறுதியில் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டி குப்பத்தை சேர்ந்த தெய்வக்கண்ணு(56) என்பவருடன் வசந்தி அடிக்கடி பேசி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தெய்வக்கண்ணைப் பிடித்து விசாரித்த போலீஸிடம் தான் தான் வசந்தியை கொலை செய்ததாக தெய்வக்கண்ணு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், துணிக்கடை வீட்டில் வேலை செய்து வந்தபோது பணம் கொடுத்து வாங்குவது மூலமாக தெய்வக்கண்ணுவுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தெய்வக்கண்ணு, வசந்திக்கு பணம் நகை அவர் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து வசந்தி தீடிரென தெய்வக்கண்ணுவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வசந்திக்கு வேறு ஒரு இளைஞருடன்  திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது குறித்து தெய்வக்கண்ணுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தெய்வக்கண்ணு பலமுறை வசந்தியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு எல்லாம் வசந்தி சரிவர பதிலளிக்கவிலலை. இதனால் வசந்தியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தெய்வக்கண்ணு, ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 4 ஆம் தேதி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று காலை 11 மணிக்கு வசந்தியும் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது இருசக்கர வாகனத்துடன் தயாராக இருந்த தெய்வக்கண்ணு  வசந்தியை அழைத்துகொண்டு மலட்டாற்று பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே வங்கி வைத்த மதுவை குடித்துவிட்டு தெய்வக்கண்ணு வசந்தியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வசந்திக்கு கம்பங்கூலில் மயக்கமருந்தை கலந்துகொடுத்துள்ளார்.

பாதி மயக்கத்தில் இருந்த வசந்தியிடம் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் தொடர்பு குறித்து தெய்வக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாற ஆத்திரப்பட்ட தெய்வக்கண்ணு, வசந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்பு உடலை புதரில் வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த நிலையில் வசந்தியை காணவில்லை என்று அவரது கணவர் குப்புசாமி போலீஸில் புகார் கொடுத்ததை அறிந்த தெய்வக்கண்ணு விசாரணையில் தான் மாட்டிகொள்வேன் என்று மீண்டும் மலட்டாறு சென்று வசந்தியின் உடலில் பெட்ரோல் ஊறி எரித்துவிட்டு சென்றதாக தெய்வக்கண்ணு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெய்வக்கண்ணு மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.