Skip to main content

"மூன்று வேளைச் சாப்பாடு என்பதே ஊர்ஜிதம் இல்லாத ரெயில்பெட்டிக் குடும்பத்தில்பிறந்த .." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #25

Published on 14/03/2020 | Edited on 24/03/2020


நடுநிசிக்கு சற்று முந்தைய நேரம் அவள் கண்களில் சொல்லொண்ணா ஒளி தென்பட்டது. இதுவரையில் யாருமே கண்டிராத ஏன் அவளே உணர்ந்திராத அந்த வெளிச்சம் வீடு மொத்தமும் உறங்கிக்கொண்டு இருக்க அவள் மட்டுமல்ல அவளுக்குள்ளும் அவளும் விழித்துக்கொண்டு இருந்தாள். மழை மெல்ல தன் தூரல்களை அந்த இரவு நேர நிசப்தத்திற்கு விருந்தாக்கிக் கொண்டு இருக்க சாலையோர பாதையில் இருந்து தத்தி தடுமாறி ஒரு கருப்பு பூனைக்குட்டி உள்ளே நுழைந்தது. அடுப்பங்கரையில் சென்று சிறு கிண்ணத்தில் பாலை கொண்டு வந்து கேட்டினை திறக்காமலே இடுக்கில் வைத்தாள். நன்றிப்பெருக்குடன் பாலைப் பருகியபடியே கேட்டிற்கு வெளியே தெரிந்த அந்த வெண் பாதங்களை மியாவ் என்று பாசத்தோடு நக்கிக்கொடுத்தது. அவளின் கவனம் முழுக்க அந்தக்குட்டியின் மேல் படிந்தது.

 

gh



அதரங்களில் அடங்காத அடக்கமுடியாத மென்நகையோடு கீழே அமர்ந்து பூனையின் தலையைத் தடவியபடியே கையில் எடுத்தாள்.பூனையின் கண்களில் சிநேகம் சட்டென்று சுவற்றின் மேல் அதை வீசினாள், அடிப்பட்ட வலியோடு நிலைகுலைந்து மெல்ல எழுந்து மீண்டும் அவளை நோக்கி வந்தது அவளுக்குள்ளே இருக்கும் அவளுக்கு ஆச்சிரியமாய் இருந்தது அது போய்விடும் என்று நினைத்தாள். இம்முறை நிதானமாய் கைகளில் எடுத்து தடவி பின் குறைந்த தூரம் வீசினாள் இப்படியே அவள் வீசுவதும் பூனை திரும்பிவருவதுமாய் இருக்க அந்த விளையாட்டு அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பூனையின் நிலையோ ஆங்காங்கே சிராய்ப்போடு ஏன் அவளை நோக்கிச் செல்கிறோம் என்றே அறியாமல் பூனையின் மூளைக்கு ஏதோ தவறு இழைத்துவிட்டோமோ என்று தயக்கம் தோன்ற ஒரு நொடி நிதானித்தது மீண்டும் அவளின் வா....என்ற சைகையிலும் பாதி நிரப்பிய பால் குவளையிலும் ஈர்க்கப்பட்டு ஆவலாய் ஓடி வந்தது. ருசி கண்ட பூனை இம்முறை ருசி அவளுடையதாயிற்று பூனையின் ரத்தம் முழுக்க அந்த பால் கிண்ணத்தில்! அவளின் அதரங்கள் இப்போது நனைந்திருந்தது மெல்லிய சிரிப்புக்கோடோடு அந்தப் பூனையின் ரத்தக்கோடும் ஏதோ திரில்லர் அல்லது சைக்கோ கதையின் தொடக்கத்தைப் போன்று இந்த வாரத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் அதன் மையக்கருவை ஆராயும் போது சில அதிர்வலைகள் நம்மைச் சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருக்கும். 

அவள் தினசரி மூன்று வேளைச் சாப்பாடு என்பதே ஊர்ஜிதம் இல்லாத ரெயில்பெட்டிக் குடும்பத்தில் கடைக்கோடியாய் ஏழாவதாய் பிறந்த ஜீவன். வட்டில் கிடக்கும் சோற்றுக்கு எட்டிக்காயாய் அவளைக் காணத் தோன்றும் போலும், ஆறு பிள்ளைகளுக்கும் அளந்தெடுத்து அரைடம்பளர் அமுது படைக்கும் அவளன்னை ஏழாவதாய் பிறந்த அவளை ஏழரை என்றே விளிக்கத் தோன்றும். என்ன சொல்றீங்க நீங்க அதெப்படி ஒரு தாயால் தான் பிள்ளைகளில் ஒன்றை வெறுக்க முடியும் என்று நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது. ஆனால் முடியும் அதற்கு மேற்குறிப்பிட்ட கதையின் நாயகியே சான்று. ஒரு பெண் தாய்மை அடையும் போதுதான் முழுமையடைகிறாள் என்ற கூற்றுக்களை எத்தனையோ முறை நம் காதுகளில் கேட்டுப் புளித்திருக்கும். ஆனால் ஒரு பெண் தன் தாய்மையை உணரும்போதும் அது தொடர்பான உபாதைகளிலும், பேற்றின் போதும் முதலில் அப்பாடா இறக்கி வைத்துவிட்டேன் என் பாரத்தை என்று பெருமூச்சு விடுகிறாள். அதேபோல் ஒரு பிள்ளையை சுமக்கும் போது ஏற்படும் மனநிலையும் அந்த பிள்ளையின் வளர்ப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.
 

 

sd



அப்படித்தான் இந்த ஏழாவது ஜீவன் அவள் அன்னையின் வயிற்றில் உருவெடுத்த போதே, ஒரு சாளரத்தின் நுனியில் உயிர்போகத் துடிக்கும் பறவையின் நிலைப்பாட்டை அவள் கொண்டிருக்கிறாள் அப்படித்தான் அந்த ஏழாவது குழந்தையை ஈன்றபோது அன்னைக்கு மிகப்பெரிய ஒரு வெறுப்பு அது குழந்தையின் தவறு என்பதைப் புரிந்து அவளின் சில கிலோகிராம் எடையுள்ள மூளைக்குப் புரியவில்லை. அன்றிலிருந்து நம் ஏழரைப் பிள்ளைக்கு அடியும் உதையும் தான் மாற்றாந்தாய் வேதனையை மனதளவிலும் உடலளவிலும் அவள் சுமந்தாள். வெகு அபூர்வமாய் கிடைத்த தோழமையிடம் தன் வேதனைகளை சொல்லித் தீர்த்த போது அதை தொடர்ந்து கிடைத்த அத்தனை பாவப் பார்வைகளும் வேதனைகளின் போர்வையாக அவளைத் தாங்கின. பாவப்பட்டு உணவும், உடையும், அன்பும் கூடவே காதலும் கிடைத்தது.  யாருக்காகவும் காலமும் நேரமும் காத்திருக்கப் போவதில்லை என்பதைப் போல குழந்தை சிறுமியாகி சிறுமி யுவதியாகி யுவதி மணமகளாய் மாறி மனைவியாய் அவள் கொண்டாடப்பட்டாள். இது நாள் வரையில் இருந்த உதாசீனம் அத்தனையும் மாறி ரத்தினக்கம்பள தேவதையாகிப் போனாள். ஆனால், பாவம் சொரிந்த கண்களும், வார்த்தைகளும் தற்போதைய பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் சுய பச்சாதாபம் தலை தூக்கத் தொடங்கியது. 

அதில் அவள் இன்பம் காணத் தொடங்கினாள். பாவப்பட்ட இவளுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா என்ற பொறாமைகள் கூட இனித்தன. தன் சுயத்தை அவள் இழப்பதை அறியாமலேயே கணவன் சிறு சுணக்கம் கூட இல்லாத தாம்பத்தியத்தை அளித்தான். முதல் குழந்தை கருவுற்று இருந்த போது அவளுக்கு எல்லையில்லா சந்தோஷம். ஆனால் அது காலத்தால் கலைந்த போது அவளின் துரதிருஷ்டம் துரத்துவதாகவும், அந்த பாவத்தின் சாயல் தன்னைத் தொடருவதைப் போலவும் மீண்டும் தன் மேல் விழுந்த பச்சாதாபத்தில் அவள் அதை ரசிக்க ஆரம்பித்தாள். மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்த போது அவளே அதை அழித்தாள் பச்சாதபக் கட்டிலில் தவழும் குழந்தையாய் மாறினாள். ஆனால் மூன்றாவது குழந்தையின் கர்ப்பம் தரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் கண்ணின் மணியாய் கண்காணிக்கப்பட்டதால் குழந்தை பிறந்து இரு மாதங்கள் ஆகிவிடவே, இன்று கடைசி முயற்சி தன் பிஞ்சுப் பிள்ளையைப் பறிக்க முடியாமல் போனதால் அவளின் அத்தனை கோபமும் பூனையின் மேல் போய் விழுந்தது. 


கடவுளே என்று சத்தம் எழுப்பாமலே அவளின் துணைவன் திகைத்தான் மனைவியின் இந்த செய்கைக்கு உண்டான காரணத்தை அவன் அறிந்திருக்கவில்லை, மறுநாள் ஏதேதோ காரணம் சொல்லி மருத்துமனைக்கு கூட்டிச் சென்று சோதனைக்கு உட்படுத்திப் பார்க்கையில் தெரிந்து போனது அவளின் மனச்சிதைவு. அந்த மனசிதைவு தீர்ந்து அவளை மீண்டும் தன் சிம்மாசன மகாராணியாக்க காத்திருக்கிறான் அந்த அன்பு கணவன்.

"ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #26
 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.