Skip to main content

எண்ணும் எழுத்தும்... மனதின் நூலகம் #3

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
numbers


 

பொதுவாக எண்களை நினைவில் வைத்திருப்பதைக் காட்டிலும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது சுலபம்.
 

எனவே எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவற்றை எழுத்துக்களோடு தொடர்பு படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
 

 

 

உதாரணமாக ஆங்கில எழுத்து N.
 

இந்த எழுத்தில் இருபுறமும் இரண்டு கோடுகள் உள்ளன.
 

2 என்ற எண்ணுக்குப் பதிலாக N என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
 

அதே போல M என்ற எழுத்தில் மூன்று கோடுகள் உள்ளன.
 

எனவே 3 என்ற எண்ணுக்குப் பதிலாக M என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
 

 

 

B என்ற எழுத்து 8 போலவே இருக்கிறது. எனவே 8க்குப் பதிலாக B என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
 

R என்ற எழுத்து ஆங்கிலத்தில் Four என்ற சத்ததை நினைவூட்டுகிறது. எனவே எண் 4க்குப் பதிலாக R என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
 

இதே போல வேறு சில எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
 

1      L (வடிவத்தில் ஒத்திருக்கிறது)

5      C (வடிவத்தில் ஒத்திருக்கிறது)

6      S (ஓசையில் ஒத்திருக்கிறது)

7      T (வடிவத்தில் ஒத்திருக்கிறது)

9      P (வடிவத்தில் ஒத்திருக்கிறது)

0      D (வடிவத்தில் ஒத்திருக்கிறது)

ஒரு செல்பேசி எண் 98256 03421.

 

 

இதை நினைவில் வைத்துக்கொள்ள PBN CSD MRNL என்று மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
 

எண்ணை மனப்பாடம் செய்வதை விட, இந்த எழுத்துக்களை மனப்பாடம் செய்வது சுலபம்.
 

இந்த எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும், அடுத்து செல்பேசி எண் நினைவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

 

முந்தைய பகுதி:


நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2
 

 

 

 

 

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.