Skip to main content

மனைவிக்கும் நண்பருக்கும் பிறந்த குழந்தை..! கணவன் எடுத்த முடிவு? - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 08

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

   Detective Malathi's Investigation : 08

 

தன்னிடம் வந்த விசித்திரமான ஒரு வழக்கு குறித்து நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொள்கிறார்.

 

திருமணமான ஒரு  நடுத்தர வயதுக்காரர் நம்மிடம் வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் தன்னுடைய மனைவி தன்னோடு சந்தோஷமாக இல்லை என்றும், அடிக்கடி தான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் அவர்களை சரியாக கவனிக்க முடியவில்லை என்றும் கூறி என்னுடைய மனைவியிடம் சில வித்தியாசமான நடவடிக்கையை உணர்கிறேன் என்று நம்முடைய உதவியை நாடினார். அவர் ஊருக்குச் சென்ற பிறகு நாங்கள் புலனாய்வைத் தொடங்கினோம். அவருடைய மனைவி இன்னொருவரை தினமும் சந்தித்து வந்தார். அவர் பெற்ற குழந்தையை அந்த நண்பரிடம் கொடுக்க முயன்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து நாங்கள் சேகரித்துக் கொண்டோம். 

 

ஊரிலிருந்து திரும்பி வந்த கணவர் நம்மிடம் விசாரித்தார். நடந்த விஷயங்களை அவரிடம் கூறினோம். எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினோம். படங்களில் இருந்தது இவருக்கும் நண்பர் தான் என்பது தெரிந்தது. மனைவியிடம் அவரை இதுகுறித்து பேசச் சொன்னோம். தன்னுடைய இரண்டாவது குழந்தை தனக்குப் பிறந்தது அல்ல என்கிற உண்மையை அறிந்துகொண்டதாகக் கூறினார். இவர் அடிக்கடி வெளியூருக்கு செல்பவராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடைய மனைவிக்கும் நண்பருக்கும் உறவு ஏற்பட்டு அதனால் குழந்தை பிறந்துள்ளது. 

 

இவ்வளவு பெரிய விஷயத்தை அவர் நம்மிடம் சாதாரணமாகச் சொன்னார். தன்னுடைய குழந்தையை நண்பரிடம் கொடுக்கப் போவதில்லை என்றும், ஆனால் அந்தக் குழந்தை நண்பருக்குத் தான் பிறந்தது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினார். பரிசோதனைக்குத் தேவையான ஆவணங்களை நண்பரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார். நாங்களும் அதைச் செய்தோம். பரிசோதனையில் அது நண்பருடைய குழந்தை தான் என்று தெரிந்தது.

 

பின் நாட்களில் சட்டப்பூர்வமாக எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இவை அனைத்தையும் செய்ததாக அவர் கூறினார். மனைவியை விட்டுவிட்டு அடிக்கடி வெளிநாடு செல்வதால் தானும் ஒரு குற்றவாளி தான் என்பதை உணர்ந்ததால் இதைக் கடந்து செல்வதாகக் கூறினார். தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் தான் இனி நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்றும் கூறினார். அவருடைய மனைவியும் புதிய வாழ்க்கைக்குத் தயாரானார்.

 

வெறுமை உணர்வினால் தான் பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இதற்கு வாய்ப்பில்லை. காலமாற்றத்தில் நன்மையும் பிரச்சனைகளும் சரிசமமாக இருக்கின்றன.


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.