Skip to main content

நீ கல்யாணம் பண்ணப் போறது என் மனைவி; மாப்பிள்ளைக்கு வந்த அதிர்ச்சி- டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 04

Published on 22/03/2023 | Edited on 25/03/2023

 

 Detective Malathi's Investigation : 03 

 

துப்பறியும் பணி என்பது சாதாரண பணியல்ல. அதுவும் அந்தப் பணியில் ஒரு பெண் ஈடுபடுவது மிகப்பெரிய விஷயம். கடினமான சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து இதில் பயணித்து வரும் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

வெளிநாட்டில் துப்பறிவாளர்களுக்கு இருக்கும் மரியாதை நம் நாட்டில் கிடையாது. பெரும்பாலும் குடும்பங்கள் சார்ந்த வழக்குகளே நம்மிடம் வரும். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை உடனே மறந்துவிட வேண்டும் என்பதே எங்கள் துறையின் தாரக மந்திரம். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பையன் நம்மைத் தொடர்புகொண்டான். "நீ என்னுடைய மனைவியைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்" என்று எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன என்றான் அந்தப் பையன். மொபைல் அதிகம் இல்லாத காலம் அது. எனவே தொலைப்பேசியில் இந்தப் பையனுக்கு வரும் அழைப்புகளை நாம் எடுத்துப் பேசும்போது "இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது" என்றனர்.

 

விசாரித்தபோது உண்மையிலேயே அந்தப் பெண்ணுக்கு ஒருவரோடு திருமணம் பதிவாகியுள்ளது தெரிந்தது. குடியிருந்த வீட்டில், வீட்டு உரிமையாளரின் பையனுடன் இந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருந்துள்ளது. எனவே இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். சில நாட்கள் நன்றாகவே கடந்தன. அந்தப் பெண்ணின் தந்தைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி சென்னைக்கு சென்றனர். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு அந்த உறவின் மேல் ஈடுபாடு இல்லை. அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இந்தப் பையனுக்கு அதிர்ச்சியானது. இந்த விஷயத்தை அந்தப் பெண்ணுடைய தந்தைக்கு தயங்கித் தயங்கி சொன்னோம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டார். தற்போது நிச்சயம் செய்திருக்கும் கல்யாணத்தை நிறுத்துவது என்று முடிவு செய்தார். 

 

இரண்டு பக்கமும் பேசி சமாதானம் செய்தோம். தன்னுடைய தந்தைக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக அந்தப் பெண் வருந்தினாள். ஆனால் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பையனோடு வாழ அவள் விரும்பவில்லை. அந்தப் பையனையும் சமாதானப்படுத்தினோம். இருவரும் பிரிந்து சென்றனர். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. நம்முடைய கலாச்சாரத்தை நாம் எப்படி காப்பாற்றப் போகிறோம் என்கிற கவலை தற்போது அதிகம் இருக்கிறது. காலம் விரைவாக மாறி வருகிறது. பெண்கள் தைரியமாக வெளியே வருவது ஒரு நல்ல மாற்றம். தவறான நோக்கத்துக்காக உளவு பார்க்க விரும்புபவர்களின் வழக்குகளை நாம் எடுத்துக் கொள்வதில்லை.


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.