வறுமையின் பெயரால் ம.பி. பாஜக முதல்வர் சுருட்டிய கோடிகள்! (BUNDELKHAND PACKAGE SCAM- MADHYA PRADESH)
மத்தியப்பிரதேச மாநிலத்தையும், உத்தரப்பிரதேச மாநிலத்தையும் உள்ளடக்கிய மலைப்பகுதி மாவட்டங்களை பண்டெல்கண்ட் என்று அழைப்பார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தப் பகுதியில் 6 மாவட்டங்கள் இருக்கின்றன. வறட்சியின கோரப்பிடியில் சிக்கிய இந்த மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக 2008- ஆம் ஆண்டு ரூ.7,400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் இந்தப் பணத்தை வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிட்டதாக கூறியது. ஆனால், கண்கூடாக எதுவுமே செய்யப்படவில்லை. பணத்தை பாஜகவினர் மொத்தமாக விழுங்கிவிட்டனர்.
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் சத்தீஷ்கர் பாஜக அரசு மோசடி! (BUDGET SCAM (CHHATTISGARH)
2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுக்கான சத்தீஷ்கர் மாநில பட்ஜெட் நிதி 80,200 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவே இல்லை. இதை கண்டுபிடித்த பொதுக்கணக்கு தணிக்கைத்துறை அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியாக கண்டித்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவின் குவாரி ஊழல்! BAJRI SCAM (RAJASTHAN)
ராஜஸ்தானில் மணல் மற்றும் கல் குவாரிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. ஆனாலும், வசுந்தராராஜே அரசு சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி அளித்தது. எனவே மார்க்கெட்டில் தடையில்லாமல் மணல் கிடைத்தது. ஆனால், ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டது. இந்த கள்ளமார்க்கெட் வர்த்தகத்திற்காகவே பாஜக அரசு முறையான குவாரி கொள்கையை வகுக்க மறுத்தது.
ராஜஸ்தான் பாஜக அரசின் இன்சூரன்ஸ் பாலிசி மோசடி! BHAMASHAH HEALTH INSURANCE SCAM (RAJASTHAN)
ராஜஸ்தானில் பமாஷா ஸ்வஸ்தியா பீமா யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழக்கத்தை விட இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்தன. இவற்றில் பெரும்பாலானவை மோசடியான விண்ணப்பங்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. தேவையில்லாத மருத்துவ சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை கோரப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அந்தச் சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை ஒருபோதும் கொடுத்ததே இல்லை. இந்த இன்சூரன்ஸ் தொகையை விண்ணப்பித்த நோயாளிகளும் உண்மையில் நோய்வாய்ப்பட்டவர்கள் இல்லை. இந்த மோசடி குறித்து வெளியான பிறகும் அரசு தனது மவுனத்தை கலைக்கவே இல்லை. அரசுக்கும் இத்தகைய பிராடு மருத்துவமனைகளுக்கும் இருந்த தொடர்பு இதன் மூலம் அம்பலமாகியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க ஹவாலாவை பயன்படுத்திய குஜராத் பாஜக தலைவர்கள்! (BITCOIN SCAM)
குஜராத் பாஜக தலைவர்கள் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கள்ளப்பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலமாக நல்ல பணமாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் நளின் கொட்டாடியா தலைமறைவானார். அவரை இப்போது வரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், குஜராத் சிஐடி போலீஸார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தான் இதில் மாற்றப்பட்டதாக கூறி பாஜகவை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.
கோவா அரசின் கட்டட வாடகை ஊழல்! (BUILDING SCAM- GOA)
கோவா அரசு அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களுக்காக ஒரு ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 538 ரூபாய் வாடகை கொடுத்ததாக அந்த மாநில பாஜக முதல்வர் மனோகர் பரிக்கர் அரசு கூறியது. இந்த கட்டிட வளாகம் நிலேஷ் அமோன்கர் என்பவருக்கு சொந்தமானது. இவர் கோவாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வர்த்தகர். இந்த கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் காலி செய்து ஒரு ஆண்டு சும்மாவே கிடந்தது. இப்படிப்பட்ட நிலையில் அன்றைக்கு உள்ள நடைமுறை வாடகைக் கட்டணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக கோவா அரசு கணக்குக் காட்டியது பெரிய ஊழலாக கருதப்பட்டது.
முந்தைய பகுதி:
ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி1
அடுத்த பகுதி: