Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

Published on 13/07/2019 | Edited on 15/07/2019

வறுமையின் பெயரால் ம.பி. பாஜக முதல்வர் சுருட்டிய கோடிகள்! (BUNDELKHAND PACKAGE SCAM- MADHYA PRADESH)

 

 

 

madhya pradesh

 

 

மத்தியப்பிரதேச மாநிலத்தையும், உத்தரப்பிரதேச மாநிலத்தையும் உள்ளடக்கிய மலைப்பகுதி மாவட்டங்களை பண்டெல்கண்ட் என்று அழைப்பார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தப் பகுதியில் 6 மாவட்டங்கள் இருக்கின்றன. வறட்சியின கோரப்பிடியில் சிக்கிய இந்த மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக 2008- ஆம் ஆண்டு ரூ.7,400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் இந்தப் பணத்தை வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிட்டதாக கூறியது. ஆனால், கண்கூடாக எதுவுமே செய்யப்படவில்லை. பணத்தை பாஜகவினர் மொத்தமாக விழுங்கிவிட்டனர்.

 

 

 

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் சத்தீஷ்கர் பாஜக அரசு மோசடி! (BUDGET SCAM (CHHATTISGARH)

 

 

chhattisgarh

 

 

 

2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுக்கான சத்தீஷ்கர் மாநில பட்ஜெட் நிதி 80,200 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவே இல்லை. இதை கண்டுபிடித்த பொதுக்கணக்கு தணிக்கைத்துறை அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியாக கண்டித்தது.

 

 

 

ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவின் குவாரி ஊழல்! BAJRI SCAM (RAJASTHAN)

 

 

rajasthan

 

 

ராஜஸ்தானில் மணல் மற்றும் கல் குவாரிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. ஆனாலும், வசுந்தராராஜே அரசு சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி அளித்தது. எனவே மார்க்கெட்டில் தடையில்லாமல் மணல் கிடைத்தது. ஆனால், ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டது. இந்த கள்ளமார்க்கெட் வர்த்தகத்திற்காகவே பாஜக அரசு முறையான குவாரி கொள்கையை வகுக்க மறுத்தது. 

 

 

 


ராஜஸ்தான் பாஜக அரசின் இன்சூரன்ஸ் பாலிசி மோசடி! BHAMASHAH HEALTH INSURANCE SCAM (RAJASTHAN)

 

 

 

rajasthan

 

 

ராஜஸ்தானில் பமாஷா ஸ்வஸ்தியா பீமா யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழக்கத்தை விட இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்தன. இவற்றில் பெரும்பாலானவை மோசடியான விண்ணப்பங்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. தேவையில்லாத மருத்துவ சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை கோரப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அந்தச் சேவைகளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் தொகை ஒருபோதும் கொடுத்ததே இல்லை. இந்த இன்சூரன்ஸ் தொகையை விண்ணப்பித்த நோயாளிகளும் உண்மையில் நோய்வாய்ப்பட்டவர்கள் இல்லை. இந்த மோசடி குறித்து வெளியான பிறகும் அரசு தனது மவுனத்தை கலைக்கவே இல்லை. அரசுக்கும் இத்தகைய பிராடு மருத்துவமனைகளுக்கும் இருந்த தொடர்பு இதன் மூலம் அம்பலமாகியது.

 

 


கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க ஹவாலாவை பயன்படுத்திய குஜராத் பாஜக தலைவர்கள்! (BITCOIN SCAM)

 

 

 

 

bit coinscam

 

 

 

குஜராத் பாஜக தலைவர்கள் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கள்ளப்பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலமாக நல்ல பணமாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் நளின் கொட்டாடியா தலைமறைவானார். அவரை இப்போது வரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், குஜராத் சிஐடி போலீஸார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தான் இதில் மாற்றப்பட்டதாக கூறி பாஜகவை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.

 

 

 

கோவா அரசின் கட்டட வாடகை ஊழல்! (BUILDING SCAM- GOA)

 

 

goa

 

 

 

கோவா அரசு அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களுக்காக ஒரு ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 538 ரூபாய் வாடகை கொடுத்ததாக அந்த மாநில பாஜக முதல்வர் மனோகர் பரிக்கர் அரசு கூறியது. இந்த கட்டிட வளாகம் நிலேஷ் அமோன்கர் என்பவருக்கு சொந்தமானது. இவர் கோவாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வர்த்தகர். இந்த கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் காலி செய்து ஒரு ஆண்டு சும்மாவே கிடந்தது. இப்படிப்பட்ட நிலையில் அன்றைக்கு உள்ள நடைமுறை வாடகைக் கட்டணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக கோவா அரசு கணக்குக் காட்டியது பெரிய ஊழலாக கருதப்பட்டது.

 

முந்தைய பகுதி:


ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி1

 

அடுத்த பகுதி:
 

 ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -3

 

 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் தேதியில் மாற்றம்; வேட்பாளர் உயிரிழப்பால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.