Skip to main content

மனித மூளையின் அற்புதங்கள் 20!

Published on 23/11/2018 | Edited on 22/01/2019

   

brain

 

நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமானது மூளை. நமது மூளையின் முழுமையான ஆற்றலை ஆய்வு செய்தால், நாம் நமது மூளையை முழுமையாக பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம்தான் வரும். உடல் உறுப்புகளில் இதயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த மூளை, நமது நினைவுகளை சேமிக்கிறது. ஆளுமைக்கும், அறிவாற்றலுக்கும் மையமாக திகழ்கிறது.

 

இன்னமும் நமது மூளையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாத நிலையில், தெரிந்த அளவில் சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.



 

brain


 

1. நமது மூளை 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. வேறு எந்த உறுப்பும் இந்த அளவுக்கு கொழுப்பால் ஆனது இல்லை.



 

brain

 

2. நமது மூளை வலியை உணராது. ஏனெனில் வலியை உணரும் வலி வாங்கிகள் மூளையில் இல்லை. எனவேதான் நமது மூளை மண்டையோட்டுக்குள் நகரும்போதும், உந்தும்போதும் நமக்கு அந்த வலி தெரிவதில்லை.

 

brain


 

3. மண்டையோட்டை கழற்றிவிட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது நாம் விழிப்பில்தான் இருப்போம், வலி வாங்கிகள் இல்லாததால் நமக்கு வலி தெரியாது. மருத்துவர்கள் ஏன் நம்மை விழிப்பில் வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்றால், அப்போதுதான் மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

 



 

brain

 

4. நமது மூளை 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அதாவது மின்சார பல்பை எரிய வைக்கும் அளவுக்கு இந்த மின்சாரம் இருக்கும். சரியாக புரிந்துகொள்ளாதவர்களை ட்யூப் லைட் என்றும், புத்திகூர்மை உள்ளவர்களை குண்டு பல்பு என்றும் சொல்வது இதற்காகத்தானோ…



 

brain


 

5. பொருட்களை நாம் சரியாக காண்பதற்கு மூளைதான் உதவுகிறது. பொதுவாக நமது கண்கள் பொருட்களை தலைகீழாகத்தான் பதிவு செய்யும். அந்த தலைகீழ் காட்சியை நேராக்கி இயல்பாக்குவது மூளைதான்.

 


 

brain

 

6. மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அறிவாற்றலும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் புத்திக்கூர்மைக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.



 

brain

 

 

7. நமது மூளையில் உள்ள மெல்லிய நரம்பு இழைகள் 1 லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் நீண்டு பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. இந்த நரம்புகள்தான் நமது உடலின் அத்தனை பாகங்களுக்கும் தகவல்களை அனுப்புகின்றன.

 

 

brain

 

8. டீன் ஏஜ் பருவத்திலோ, இருபது வயதுகளிலோ நமது உடலின் சில உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்திவிடுகின்றன. ஆனால், மூளை அப்படியல்ல. நாம் நமது 40 வயதுகளில் இருக்கும் சமயத்திலும், நமது மூளை தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. புதியவற்றைக் கற்கும்போதும் அவற்றை நமது மூளை ஏற்று பதிவு செய்கிறது.

 

brain



 

9. நமது உடல் தளர்ந்து சோர்வாக உணரும்போது அதற்கு காரணம் மூளைதான் காரண். மூளை அப்படிச் சோர்வாக உணரும்போதுதான் நமது உடலும் சோர்வாக உணர்கிறது.



 

brain

 

10. நாம் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு 70 ஆயிரம் விஷயங்களை நாம் சிந்திக்கிறோம் என்கிறார்கள்.



 

brain

 

11. நீங்கள் எப்போதேனும் அதிவேகமாக சிந்திப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களை சிந்தித்திருக்கிறீர்களா? நமது மூளை மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் தகவல்களை பரிமாறுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 

brain


 

12. நமது மூளையின் அளவு வளர்வதே இல்லை. பிறக்கும்போது எந்த அளவில் இருந்ததோ அதே அளவில்தான் கடைசிவரை இருக்கும். பிறந்த குழந்தையின் தலை அதன் உடலைக் காட்டிலும் பெரிதாக இருப்பதை கவனித்தால் இது புரியும்.

brauifghfg


 

13. மூளை எப்போதும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நாம் விழித்திருக்கும்போதைக் காட்டிலும் தூங்கும்போது அதிவேகமாக சிந்திக்கும்.

 

brain


 

14. நமது மூளை, நமது எடையில் 2 சதவீதத்தை எடுத்துக் கொண்டு, நமது ஆற்றலில் 25 சதவீதத்தை உபயோகித்துக் கொள்கிறது.

 

brain

 

15. நமது மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நம்மிடம் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. உதாரணத்திறக்கு இந்த படத்தில் ஏ மற்றும் பி சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. ஆனால், அவை இரண்டும் ஒரே நிறம்தான்.



 

brain

 

16. நாம் உயிர்வாழ நமது மூளையின் ஒரு பகுதி போதுமானது. மூளை அற்புதமானது. மூளையின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், சேதமடையாத பக்கத்து மூளை, சேதமடைந்த பக்கத்தின் செயல்பாடுகளை தனக்குள் இணைத்துக் கொள்ளும்.

 

 

 

brain

 

 

17. மூளை தனது செயல்பாடுகளுக்காக வினாடிக்கு 1 லட்சம் ரசாயன விளைவுகளை சந்திக்கிறது. பொருள்களை சிந்திப்பது, பொருள்களை நினைவுபடுத்துவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது என்று மூளை பல வேலைகளை ஒரேசமயத்தில் செய்கிறது.

 

brain

 

18. நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ… 2 வயதில் தவழும்போது மூளையின் அணுக்கள் வளர்ச்சியை நிறுத்துகின்றன. அதன்பிறகு அணுக்கள் வளர்வதே இல்லை. அதன்பிறகு ஒன்று அணுக்களின் எண்ணிக்கை குறையும் அல்லது நிலையாக இருக்கும்.

 

2yrsbrain

19. கர்ப்ப காலத்தில் பெண்களின் மூளையின் அளவு சற்று சரியும். இது உண்மை. குழந்தையை பிரசவித்த ஆறு மாதங்கள் கழித்தே அந்த பெண்ணின் மூளை பழைய அளவுக்கு மாறும்.

 

 

 

brain

 

 

 

20. ஒருவருடைய வாழ்நாளில் அவருடைய மூளை ஆயிரம் லட்சம் கோடி தகவல்களை சேமித்து வைக்கிறது. இந்த தகவல்களின் எடை ஒரு டன் இருக்கும்.

 

 

 

 

 

Next Story

மூளையில் நெளிந்த 8 சென்டிமீட்டர் புழு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 An 8 cm worm coiled in the brain

 

உலகிலேயே முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் நெளிந்து கொண்டிருந்த புழு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் மூன்று வாரங்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஜனவரி 2021ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வறட்டு இருமல் மற்றும் இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை இருந்தது. இரண்டு ஆண்டுகளாக நிமோனியா மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். 2022-ல் சுமார் மூன்று மாத காலம் அவர் மறதி மற்றும் மோசமான மன அழுத்தத்திற்கும் உள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் ஆய்வு அவருடைய மூளையில் காயம் இருப்பதைக் காட்டியது.

 

தொடர் சிகிச்சையின் மருத்துவ ஆய்வில் அவருடைய மூளையில் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற ஒரு வகையான புழு ஒன்று உயிருடன் நெளிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கீரை பறிக்கும் வேலை செய்து வந்த அந்த பெண்ணின் உடலுக்குள் இந்த ஒட்டுண்ணி புழுவின் முட்டைகள் நுழைந்து மூளைக்குச் சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது சுமார் 8 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த புழு பெண்ணின் மூளையில் இருந்து உயிருடன் அகற்றப்பட்டுள்ளது. 

 

 

Next Story

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை - மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

pig heart human

 

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மருத்துவர்கள், மருத்துவ வரலாற்றில் புதிய உச்சமாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

 

இதன்காரணமாக டேவிட் பென்னட்டை காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தியுள்ளனர்.

 

தற்போது டேவிட் பென்னட் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பின்னர் பன்றியின் இதயம் டேவிட் பென்னட்க்கு பொருத்தப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர். தற்போது அதேநாட்டை சேர்ந்த மருத்துவர்கள் சிலபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புகளுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.