Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 15

Published on 13/12/2019 | Edited on 06/01/2020


புனே பாஜக தலைவரின் நில ஊழல்!  PUNE LAND SCAM (MAHARASHTRA)

மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் பாஜக-சிவசேனா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜ் புரோஹித். 1995-1999 காலகட்டத்தில் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி, நகர்ப்புற நில கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்மூலம், நிலம் கையகப்படுத்துதலில் இருந்து புனேவுக்கு விலக்கு அளித்தார். இது 2005ல் அம்பலமானது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தனிநபர்கள் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை கைப்பற்ற அவர் உதவியிருப்பது தெரியவந்தது. 

உத்தரப்பிரதேச பாஜக அரசின் பெட்ரோல் பம்ப் ஊழல்! PETROL PUMP SCAM (UP)

 

nm



ஒரு பெட்ரோல் பம்ப்புக்காக சாலையை அகலப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் முதன்மை செயலாளர் ஷஷி பிரகாஷ் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஹர்டோய் நகரில் பெட்ரோல் பம்ப் இருக்கும் சாலை குறுகலாக இருந்ததாகவும், அதை அகலப்படுத்தும்படி உரிமையாளர் கேட்டதாகவும், அதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

ரேசனில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்!  PDS SCAM (CHHATTISGARH)

 

bn



சத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வர் ராமன் சிங் ரேசன் வினியோகத்தில் முறைகேடு செய்து 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமானது. மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியில் முறைகேடு செய்திருப்பதை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் கண்டுபிடித்தனர். ரேசன் வினியோக கழகத்தின் 36 அலுவலகங்களில் அவர்கள் நடத்திய சோதனையில் 36 ஆயிரம் கோடி ரூபாம் மீட்கப்பட்டது. இந்த ஊழலில் பாஜக அரசுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பியூஷ்கோயல் ஊழல்!  PIYUSH GOYAL SCAM

மோடி அரசில் மத்திய அமைச்சரான பியூஷ்கோயல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மையை மறைத்து மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர் வேறு நிறுவனங்களில் பங்குகளோ, பொறுப்புகளோ வகிக்கக்கூடாது. ஆனால், பியூஷ்கோயலும் அவருடைய மனைவியும் ப்ளாஷ்நெட் இன்போ சொல்யூசன்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற கம்பெனியில் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர். இந்த உண்மையை பியூஷ்கோயல் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்திருந்தார். உண்மை வெளியாகி அவர்கள் பொறுப்பிலிருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை அவர்கள் வைத்திருந்தனர். 
 

 

nb



பியூஷ் கோயலின் மனைவிக்கு 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம்! PIYUSH GOYAL-SHIRDI INDUSTRIES SCAM

அமித் ஷா மகன்  ஒரே ஆண்டில் ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்ததைப் போல, பியூஷ் கோயலின் மனைவிக்கு சொந்தமான ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்தது. பாஜகவினருக்கே சொந்தமான இந்த சாதனை அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பியூஷ் கோயலின் மனைவி சீமா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினார். அது 10 ஆண்டுகளில் 30கோடி ரூபாய் சம்பாதித்தது. அதுபோல, ராகேஷ் அகர்வால், முகேஷ் பன்சாலி என்ற பியூஷ்கோயலின் நண்பர்களுக்குச் சொந்தமான ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு பல்வேறு வங்கிகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் 650 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேள்வித்தாள் அம்பலத்தில் ஊழல்!  QUESTION PAPER LEAK SCAM

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான சிஜிஎல் தேர்வுக்கான எஸ்எஸ்சி கேள்வித்தாள்களும் அதற்குரிய விடைத்தாள்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். வேலைவாய்ப்பில் மோசடி செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பாக மோடி அரசு ஒரு வார்த்தைகூட விளக்கம் அளிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தால் அந்த பிரச்சனை காணாமல் போகும் என்ற மோடி அரசின் செயல்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணமாக ஆனது.
 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.