Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 16

Published on 14/12/2019 | Edited on 06/01/2020

நர்மதா மரம் நடு ஊழல் (மத்தியப்பிரதேசம்)  NARMADA PLANTATION SCAM (MADHYA PRADESH)

 

gh

 

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தை ஆட்சி செய்த பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு நர்மதை ஆற்றின் இரண்டு கரைகளிலும் 6 கோடி மரக்கன்றுகளை நட முடிவெடுத்தது. ஒரே நாளில் நட முடிவெடுக்கப்பட்டு, அதற்காக 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பழக் கன்றுகளையும், பழம் தராத கன்றுகளையும் நடுவதற்கு முடிவெடுக்கப்பட்டாலும், இதற்கான அரசு மதிப்பீடு வெளியிடப்படவே இல்லை. இந்த திட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் வினாயக் பரிகர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தத் திட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் கூட உயிருடன் இல்லை என்று அவர் தணிக்கை ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டார். அவசரக் கோலத்தில் திட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பே இது என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்து சில சாமியார்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவர்களுக்கு மாநில இணை அமைச்சர் அந்தஸ்த்தை வழங்கி அவர்களுடைய வாயை அடைத்தது பாஜக அரசு.

வைர வியாபாரி நிரவ் மோடியின் ஊழல் NIRAV MODI SCAM
 

ghm



இது பாஜக ஆதரவுடன் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஆகும். இந்தியா இதுவரை கண்டிராத வங்கி மோசடி என்று கூறப்படும் இதில் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் அவருடைய உறவினர் மெஹுல் சோக்ஸியும் சம்பந்தப்பட்டார்கள். பஞ்சாப் நேஷல் வங்கியில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை கட்டாமல் இந்தியாவை விட்டு தப்பினர். நிரவ் மோடி, சோக்ஸி, வங்கியின் சில அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த மோசடி குறித்து 2016 ஆம் ஆண்டிலேயே பிரதமர் அலுவலகம், செபி, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் புகார்கள் இருக்கும் நிலையிலேயே, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி டாவோஸ் நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவருடன் நிரவ் மோடியும் மேடையில் அமர்ந்திருந்தார் என்பது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

ராணுவத்துக்கு ஒதுக்கிய நிதியை விழுங்கிய பாஜக!  NORTH CACHAR HILLS SCAM (ASSAM)

 

jh



அசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அரசு ஒதுக்கிய நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை இரண்டு பாஜக தலைவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். ஜுவல் கர்லோஸா, நிரஞ்சன் ஹோஜாய் என்ற அவர்கள் இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு , 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நிதியை விழங்கிய இருவரும் பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல், டிமா ஹலம் டாவோகா என்ற தீவிரவாத குழுவின் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தக் குழு பின்னர் கலைக்கப்பட்டது என்பது அதிர்ச்சியான தகவலாக வெளியானது. அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து தங்களுடைய தீவிரவாதக் குழுவுக்கு ஆயுதங்களை வாங்கி இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தை தொடர இந்த தேச பக்தர்கள் திட்டமிட்டார்கள். இதுதான் பாஜகவின் தேசபக்தி லட்சணம்.

டாடாவுக்கு ஒதுக்கிய நிலத்தில் ஊழல்! (குஜராத்) NANO PLANT LAND SCAM (GUJARAT)

 

jkl



மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறிய டாட்டாவின் நானோ கார் தயாரிப்பு நிறுவனத்தை குஜராத் அரசு வரவேற்றது. இந்தத் தொழிற்சாலைக்காக ஆயிரத்து நூறு ஏக்கர் அரசு நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தின் அன்றைய மார்க்கெட் மதிப்பு சதுர மீட்டருக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால், சதுரமீட்டருக்கு வெறும் 900 ரூபாய் விலையில் டாடாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த வகையில் டாடாவுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை காட்டப்பட்டது. இதில் பாஜக அரசுக்கு குறிப்பிட்ட கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் மோடியின் ஊழல் NULM SCAM

 

kjl



மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நகர்ப்புற வாழ்க்கைத்தர மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நகர்ப்புற மக்களுக்காக வீடுகட்டித் தருவதற்கான திட்டம் இது. இதற்காக மத்திய அரசு 1078 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியில் வெறும் 208 வீடுகளை மட்டுமே மத்திய அரசு கட்டியது. இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை இருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. இதுதொடர்பாக மோடி அரசு தாக்கல் செய்த பதில்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் “இது மிகப்பெரிய ஊழல். திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பியது.

நீட் தேர்வில் ஊழல்! NEET SCAM

 

jkl



நீட் தேர்வைப் பயன்படுத்தி மிகக்குறைந்த கல்வித்தகுதியுடைய 3 ஆயிரம் பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டதாக மத்தியப்பிரதேச பாஜக அரசின் வியாபம் ஊழலை அம்பலப்படுத்திய டாக்டர் ஆனந்தராஜ் அம்பலப்படுத்தினார். இதற்காக ஒரு மாணவருக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக அவர் ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டார். அதுமட்டுமின்றி, முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை நடத்துவதற்காக எந்த அரசு அறிவிக்கையும் வெளியிடாமல் சுமார் 320 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரும் வழங்கப்பட்டது என்று ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

குஜராத் பாஜக தலைவர்களின் கற்பழிப்பு குற்றங்கள்! NALIA SCAM (GUJARAT)

19 வயதுப் பெண் ஒருவரை குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சாந்திலால் சோலன்கி என்பவர் வேறு இருவருடன் சேர்த்து கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண், “நான் மட்டும்தான் தைரியமாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறேன். மேலும் பல பெண்கள் பயந்துபோய் இருக்கிறார்கள்” என்றார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் அப்டஸா தாலுகாவின் பாஜக பிற்பட்டோர் பிரிவு அமைப்பாளராக சோலன்கி இருக்கிறார். இத்தகைய பாலியல் குற்றங்களில் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகளையும் பாஜக தலைவர்கள் சீரழித்திருப்பதாக கட்ச் போலீஸார் தெரிவித்தனர்.

பாஜக தலைவரின் ஆயுதபேர ஊழல்!  OPERATION WEST END

 

jkl



இது வாஜ்பாய் அரசில் நடந்தது. 2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் பாஜகவின் தலைவராக பங்காரு லட்சுமணன் என்பவர் பொறுப்பு வகித்தார். அப்போது, ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்வதற்கு தங்களுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று அவரிடம் லஞ்சம் கொடுக்கப்பட்டது. இது ரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு தெஹல்கா இணையப் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பங்காரு லட்சுமணன் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கேஸ் ஆவியாகமல் தடுக்க 80 கோடி ஏப்பம்! ONGC SCAM

 

j



மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் எரிவாயு ஆவியாகாமல் தடுக்க கருவிகளை வாங்க விரும்பியது. இதற்காக அரசு வகுத்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் டீப் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு 312 கோடி ரூபாய்க்கு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆர்டர் கொடுத்தது. ஆனால், போதுமான தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்ற அந்த தொழிற்சாலையால் முடியவில்லை. எனவே, இந்த வகையில் ரூ.80கோடி ஓஎன்ஜிசிக்கு இழப்பு ஏற்பட்டது.

 


 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.