Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 18

Published on 21/12/2019 | Edited on 06/01/2020

கும்பமேளாவுக்கு கையகப்படுத்திய நிலத்தை விழுங்கிய பாஜக தலைவர்கள்!- UJJAIN SIMHASTHA KUMBH MELA SCAM (MADHYA PRADESH)


மத்தியப் பிரதேச பாஜக தலைவர்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள். ஊழலிலேயே ஊறித் திளைத்தவர்கள். அந்த மாநிலத்தில் உள்ள சிம்மஹஸ்தா கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்காக அரசு சார்பில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், 2016 ஏப்ரலில் கும்பமேளா முடிந்தவுடன் அந்த இடத்தை பாஜக தலைவர்கள் பலர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினர். தனிநபர்களும் ஆக்கிரமித்து வீடுகளையும், பெரிய கட்டடங்களையும் கட்டத் தொடங்கிவிட்டனர். அடுத்த கும்பமேளாவுக்குள் அந்த இடம் முழுவதையும் தனியார் விழுங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

athanur chozhan bjp  a to z part 18

 
நிலத்தை ஏப்பம் விட்டதோடு மட்டுமின்றி, கும்பமேளாவுக்காக ஒதுக்கிய நிதியிலும் 2 ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிவிட்டனர். அன்றைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உஜ்ஜையினி கும்பமேளாவுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மாநில சட்டசபையில் அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்திலோ கும்பமேளாவுக்காக 4 ஆயிரத்து 471 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

athanur chozhan bjp  a to z part 18



இந்த இரண்டு தொகைகளுக்கும் இடையே வித்தியாசப்படும் 2 ஆயிரத்து 470 கோடி ரூபாய் குறித்து முதல்வர் கருத்தே தெரிவிக்கவில்லை. அதேசமயம், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை நாள் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ், மீண்டும் ஒரு பொய்யை சொன்னார். கும்பமேளாவுக்கா மாநில அரசு 3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் தெரிவித்தார். கும்பமேளாவுக்கா வாங்கிய பொருட்களில் ஏராளமான விலை முறைகேடுகள் இருந்தன.
 


குஜராத் பல்கலைக்கழக நிலத்தை ஓட்டல் கட்ட கொடுத்த பாஜக அரசு!- UNIVERSITY LAND SCAM

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இரு்ககிறது நவ்ஸாரி வேளாண் பல்கலைக்கழகம். இந்த பல்கலை.க்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலத்தை, சத்ரலா இந்தியன் ஹோட்டல் குழுமத்திற்கு குஜராத் அரசு தாரை வார்த்தது. இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாக எதிர்த்ததையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை ஹோட்டல் கட்ட கொடுத்தது அரசு. இதன்காரணமாக 426 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

athanur chozhan bjp  a to z part 18


 

 
வியாபம் ஊழல்!- VYAPAM SCAM (MP)

பாஜக ஆட்சி செய்த மாநில அரசுகளில் மத்தியப்பிரதேசம்தான் மிகப்பெரிய ஊழல்களில் சிக்கிய மாநிலம் என்று உறுதியாக கூறலாம். மத்தியப்பிரதேச வேலைவாய்ப்பு தேர்வுகள் வாரியத்தில் நடைபெற்ற ஊழல் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெற்றதில்லை. இந்தத் தேர்வில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று அது அம்பலமானது. தேர்வு முடிவுகளில் நடைபெற்ற மோசடிகள்தான் இந்த ஊழலை வெளிப்படுத்தியது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, காப்பியடித்து தேர்வெழுத அனுமதித்தது, பதில் எழுதாமல் பேப்பரை கொடுத்து பின்னர் பதில் எழுதியது, போலியாக அதிக மதிப்பெண் வழங்கியது என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் அரங்கேறின. இந்த ஊழல் வெளியானதும் இதில் தொடர்புடை பாஜக அரசின் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் ஷர்மா கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க, ஊழலில் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டனர். இந்த ஷர்மா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நெருங்கிய நண்பர் என்பதை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

athanur chozhan bjp  a to z part 18




 

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.