திரையுலகில் ஒரு விஷயம் நடந்து முடியும்வரை எதுவுமே நிச்சயமில்லை. இது அனைத்திற்கும் பொருந்தும். ஒரு திரைப்படத்திற்காக, எல்லா விஷயங்களும் பேசி, முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் நேர்ந்தசம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. பல சூப்பர்ஹிட் படங்களில் முதலில் வேறு நாயகர்கள் நடிப்பதாக இருந்து பிறகு வேறு ஒருவர் நடித்திருப்பார்.நடிப்பில்மட்டுமல்லாமல் ஒரு படத்தின்கேப்டன்ஆஃப்த ஷிப்என்று சொல்லப்படக்கூடிய இயக்குநர் விஷயத்திலும் கூடஇப்படி நடந்திருக்கின்றன. அப்படி ஒரு கதையைத்தான் இன்று பேசப்போகிறோம்.

annamalai rajini

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரஜினிகாந்த், இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த இடத்திற்கு அவர் வர பல காரணங்கள். அவரது ஸ்டைல், கதைத்தேர்வு, அர்ப்பணிப்பு, கடினஉழைப்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, அந்த இடத்தை நோக்கி நடத்தியபயணத்தில் முக்கிய மைல் கற்களாக பல படங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு படங்கள்அண்ணாமலை, பாட்ஷா. அதுவரை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு, முதல் இடத்தில்இருந்தரஜினியைஅதற்கு அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்த மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம் 'அண்ணாமலை'. தமிழ் சினிமாவின் மாஸ் கமர்சியல்,பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தில் ஒரு அப்டேட்டாக அமைந்தது 'அண்ணாமலை'. ரஜினியின் பல படங்களில், டைட்டிலில் சூப்பர்ஸ்டார் என்று ஒரு மாஸான இசையுடன் வரும். அது உருவாக்கப்பட்டது அண்ணாமலை படத்தில்தான். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தஅந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால், அந்தப்படம் குறித்தஆரம்பகட்டஅறிவிப்புகளில் படத்தை இயக்கப்போவது வசந்த் என்றேதெரிவிக்கப்பட்டது.

suresh krishna

சுரேஷ் கிருஷ்ணா

சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் இருவருமேபாலச்சந்தரின் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள். சுரேஷ் கிருஷ்ணா, பாலச்சந்தரிடம் சில படங்களில் பணியாற்றிவிட்டு, கமல் நடித்த'சத்யா' படம் மூலம் இயக்குநராகிவிட்டார். அதைத் தொடர்ந்து தெலுங்கில்வெங்கடேஷ் - ரேவதி நடித்த பிரேமா, கமல்ஹாசன் நடித்த'இந்த்ருடு சந்த்ருடு' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். ஹிந்தியில் சல்மான்கான் - ரேவதி நடித்த'லவ்' படத்தையும் இயக்கினார். இப்படி பிஸியான இயக்குநராக இருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. வசந்த், பாலச்சந்தரிடம் பணியாற்றிய பின்னர்,'கேளடிகண்மணி' படம் மூலம் இயக்குநரானார். பிறகு 'நீ பாதி நான் பாதி' படத்தை இயக்கியிருந்தார். வசந்தின் படங்கள், அவரது குருநாதர்பாலச்சந்தரை நினைவுபடுத்தின. ஆனால், சுரேஷ் கிருஷ்ணா சென்றதோ வேறு பாதை. இந்நிலையில் கவிதாலயா நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்கவசந்த்ஒப்பந்தம் செய்யப்பட்டசெய்தி வெளியானது.

படத்தின்பூஜை தேதியும்அறிவிக்கப்பட்டு வேலைகள் நடந்துவந்த நிலையில்திடீரென படத்திலிருந்து விலகினார் வசந்த். பூஜைக்குவெகு சில நாட்களே இருந்த நிலையில்திடீரென அழைக்கப்பட்டார் சுரேஷ் கிருஷ்ணா. என்ன கதை, என்ன மாதிரியான படம், என்ன பட்ஜெட் என்று எதுவுமே தெரியாமல் தனது குருநாதர் அழைத்ததால் உடனே வந்து படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினி, ஒரு மாஸ்ஹீரோவாகஉருவாகிவிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரஜினிக்கு படத்தின் இயக்குநர் குறித்து ஒரு சந்தேகம் இருந்தது. முதலில்வசந்த், இப்போது சுரேஷ், இருவருமே பாலச்சந்தரின் சீடர்கள். என்னதான்ரஜினியை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்றாலும் ரஜினியின் ஸ்டைல்வேறு மாதிரி உருவாகியிருந்தது. அதனால்தான் இந்த சந்தேகம். ஆனால், சுரேஷ் கிருஷ்ணா படத்தை ரஜினிக்கு ஏற்றபடி மாஸாக உருவாக்கியிருந்தார். 'அண்ணாமலை', ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதே கூட்டணி மீண்டும் 'வீரா' படத்தைக் கொடுத்தது.

vasanth

வசந்த்

'அண்ணாமலை' ஒரு உயரம் என்றால் 'பாட்ஷா' அடுத்த மிகப்பெரிய உயரமாகரஜினிக்கு அமைந்தது. இன்று வரை ரஜினியைதுரத்தும் அரசியல் அன்று தொடங்கியதுதான். அரசியல் பேசும், வாய்ஸ் கொடுக்கும் தன்னம்பிக்கையைரஜினிக்குக் கொடுத்தது'பாட்ஷா' பெற்ற மிகப்பெரிய வெற்றி என்றுதான்சொல்லவேண்டும். 'பாட்ஷா' படத்தைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது அவர்களது அமைச்சரவைகளில் இடம் பெற்றவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்தவர். அவரது 'சத்யாமூவீஸ்'ஸின்தயாரிப்புதான்'பாட்ஷா'. ரஜினிக்குஅண்ணாமலை, வீரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்த சுரேஷ் கிருஷ்ணாமூன்றாவதாக இந்தப் படத்தை இயக்கினார். ஆனால், அவருக்கு முன்பாகஇந்தப் படத்தை இயக்குவதாக இருந்தவர் யாரென்று தெரிந்தால் நமக்கு ஆச்சரியம் ஏற்படும். இன்று நகைச்சுவை நடிகராக நம்மால் நன்கு அறியப்பட்ட மனோபாலாதான் அவர்.

manobala

மனோபாலா

மனோபாலா, இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர். 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் இயக்குநரான அவர், ரஜினிகாந்த் நடிப்பில்'ஊர்க்காவலன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தை தயாரித்ததும்ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ்தான். பிறகு சில விஜயகாந்த் படங்கள், ஹிந்தி படமொன்றுஉள்படசில படங்களை இயக்கிய மனோபாலாவை மீண்டும் அழைத்தாராம் ஆர்.எம்.வீ. மனோபாலாஅழைக்கப்பட்டது தெரியாமல், ரஜினி தரப்பு சுரேஷ் கிருஷ்ணாவை பரிந்துரைக்க, பின்னர் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியதும் படம் பெற்ற வெற்றியும் நாம் அறிந்ததே. பிறகு, ரஜினியும் சுரேஷ் கிருஷ்ணாவும் இணைந்த ‘பாபா’ வெற்றிபெறவில்லை. மனோபாலா, பின்னர் சில படங்களை இயக்கிவிட்டு. கே.எஸ்.ரவிக்குமாரின் 'நட்புக்காக' படத்தின்மூலம் நடிகராகிபுகழ்பெற்றார். பின்னர் 'சதுரங்க வேட்டை' மூலம் தயாரிப்பாளருமாகிவிட்டார்.சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் மிகப்பெரிய மாஸ்வெற்றிப் படங்களாகஅமைந்த'அண்ணாமலை', 'பாட்ஷா' படங்களைவசந்த், மனோபாலாஇயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? நடந்திருந்தால்தான் சொல்ல முடியும். சினிமாஉலகில்நடந்தால்தான் எதுவும் நிச்சயம்.

இன்னும்கதைகள் பேசுவோம்...

சென்ற கதை...

இவர் விஜய் ரசிகர், ஆனாஒரு விஷயத்தில்அஜித் மாதிரி! பழைய கதை பேசலாம் #2