Skip to main content

கையில் களிமண் பூசியிருந்தேன்... விஜய் ஷங்கர் விக்கெட்டை வீழ்த்திய ரகசியம் சொல்லும் சாஹல்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Yuzvendra Chahal

 

 

அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யுகேந்திர சாஹல் தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலம் போட்டியின் முடிவை மாற்றினார்.

 

121 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக நின்று கொண்டிருந்த ஹைதராபாத் அணி, பெங்களூரு அணி வீரர்களின் பந்துவீச்சில் சிக்கி 153 ரன்களில் ஆட்டமிழந்தது. கடைசி 32 ரன்களை எடுப்பதற்குள் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுகேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

வெற்றி குறித்து சாஹல் பேசும் போது, "என்னுடைய முதல் ஓவரை வீசும் போது இவ்வாறு நாம் பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் அதை சமாளித்து விளையாடும்போது, பந்து வீசும் முறையை மாற்றினேன். அது அவர்களை சற்று தடுமாற செய்தது. விஜய் ஷங்கர் களத்திற்கு வரும்போது, விராட் கோலியும், டிவில்லியர்ஸும் 'கூக்ளி' முறையில் பந்து வீசக் கூறினார்கள். பனியின் தாக்கம் கையில் இருக்கக்கூடாது என்பதற்காக கையில் களிமண்ணைப் பூசிவிட்டு அவருக்கு பந்து வீசினேன்" எனக் கூறினார். 

 

 

Next Story

யுவராஜ் சிங்கை கைது செய்த ஹரியானா காவல்துறை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

yuvraj singh

 

கடந்த வருடம் ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, குறிப்பிட்ட ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் குறித்துப் பேசினார். யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

 

அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து சர்ச்சைக்கு விளக்கமளித்த யுவராஜ் சிங், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலினப் பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" என தெரிவித்திருந்தார்.

 

இருப்பினும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் யுவராஜ் சிங் மீது புகாரளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்தநிலையில், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், யுவராஜ் சிங் நேற்று (17.10.2021) இரவு ஹரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சில மணிநேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

 

 

Next Story

யுவராஜ் சிங் மீது F.I.R பதிவு - ஹரியானா போலீஸார் நடவடிக்கை!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

YUVRAJ SINGH

 

கடந்த ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடும்போது, வட இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 

 

இதனையடுத்து யுவராஜ் சிங், சர்ச்சைக்குரிய தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது யுவராஜ் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. புகாரளிக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.