Skip to main content

தன்னம்பிக்கையின் நாயகன்... சச்சின்-கங்குலி-தோனியின் தளபதி...

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

2000-ஆம் ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் கிரிக்கெட் அணிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியும் ஒன்று. 

பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையிலும், புதிதாக அணியை கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையிலும் இந்திய அணிக்கு கங்குலி என்னும் தனித்துவமான லீடர் தலைமையேற்றிருந்தார். கேப்டனாக இருந்த கங்குலி அணியை வலிமைப்படுத்த பல முயற்சிகள் செய்ததில் கிடைத்த பொக்கிஷம் தான் யுவராஜ். பிக்ஸிங் காரணமாக சிதைவுற்றிருந்த இந்திய அணிக்கு சிங்கம் போல ஒரு இளம் வீரராக யுவராஜ் சிங் அறிமுகமானார்.

 

yuvaraj singh contribution to indian cricket

 

 

விக்கெட்கள் விழும்போது இக்கட்டான நிலையில் நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன், ரன் ரேட் அதிகம் தேவைப்படும் நேரங்களில் அதிரடி மன்னன், பீல்டிங்கில் ரன் அவுட், டைவ் கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்ட அசாத்திய பீல்டர், பார்ட்னர்ஷிப்களை பிரேக் செய்யும் பவுலர் என பல பரிணாமங்களில் செயல்படும் ஒரு வீரரை இந்திய அணிக்கு கொண்டு வந்தார் கங்குலி.

பேட்டிங்:

லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வேஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 326 என்ற இமாலய இலக்கை வைத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை தந்தனர். 106 ரன்களில் ஒரு விக்கெட் என்ற நிலையிலிருந்து 146 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது இந்திய அணி.

26 ஓவரில் 179 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் களத்தில் யுவராஜ் மற்றும் கைஃப் ஆகிய இரு இளம் வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளின் 2-வது பேட்டிங் இந்திய நேரப்படி இரவு நேரங்களில் நடைபெறும். முக்கிய விக்கெட்கள் இழந்து கடைசியாக அனுபவமில்லாத இரு இளம் வீரர்கள் மட்டுமே விளையாடுவதால் இந்திய அணி இந்த ரன்களை அடிக்க வாய்ப்பில்லை என இந்தியாவில் மேட்ச் பார்க்காமல் உறங்க சென்றனர் பலர்.  

ஆனால் அந்த 2 வீரர்களும் உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமல் பலர் டிவியை ஆப் செய்தனர். இந்திய அணி ஒரு சரித்திர வெற்றி படைத்ததை காலையில்  எழுந்து தான் பலர் அறிந்தனர். பிளின்டாப், டேரன் காஃப், அலெக்ஸ் டியூடர் ஆஷ்லே கில்ஸ் என சிறந்த பவுலிங் யூனிட்டை வெளுத்து வாங்கியது இந்த இளம் ஜோடி. யுவராஜ், கைஃப் இருவரும் அரைசதம் அடித்து, 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியாவை  வரலாற்று வெற்றி பெற வைத்தனர் இவர்கள்.

2000-ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் போட்டியில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பில் மெக்ராத், பிரட் லீ, கில்லஸ்பி என மிரட்டும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை அசால்ட்டாக எதிர்கொண்டு 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார் யுவராஜ்.

ஃபீல்டிங்:

 

yuvaraj singh contribution to indian cricket

 

2002-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஹர்பஜன் வீசிய பந்தை ஜாண்ட்டி ரோட்ஸ் லெக் சைடு அடித்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் யுவராஜ். அந்த கேட்ச் ஆட்டத்தை மாற்றி சுலபமாக வெற்றி பெரும் நிலையிலிருந்த தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாறி தோல்வியடைய வைத்தது. 

பவுலிங்:

 

yuvaraj singh contribution to indian cricket

 

 

பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட் எடுக்க வேண்டிய நிலையில் அணி உள்ளபோது கேப்டனின் அழைப்பு யுவராஜ் சிங்கை நோக்கி இருக்கும். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் காலிறுதி, மற்றும் அரையிறுதி போட்டிகளில் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

போராட்ட குணம்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் தனது வாழ்க்கையில் மீண்டு வருவதற்கு சைக்கிள் பந்தைய வீரரான ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை உதவியது. 1996-ஆம் ஆண்டு லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு 7 முறை தொடர்ந்து ஐரோப்பிய அளவில் சைக்கிள் பந்தைய போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவ குழு யுவராஜ்க்கும் சிகிச்சை அளித்தது. 

சிகிச்சைக்கு பிறகு 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அந்த போட்டியில் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் குவித்தார். கம்பேக்கிற்கு பிறகு 2012-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 142. 10 போட்டிகளில் 15 விக்கெட்கள். பவுலிங் சராசரி 12. எக்னாமி ரேட் 6. இப்படி மிகச்சிறப்பான ஒரு கம்பேக் கொடுத்து அசத்தினார்.

 

yuvaraj singh contribution to indian cricket

 

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிய போது தோனியுடன் யுவராஜ் பார்ட்னர்ஷிப்பில் 256 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 

உலகக்கோப்பைகளின் நாயகன்:

1996-ஆம் ஆண்டு அண்டர் 15 உலகக்கோப்பை, 2000-ஆம் ஆண்டில் அண்டர் 19 உலகக்கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை என இந்திய வென்ற தொடர்களில் தொடர்நாயகன் விருதை பெற்றுள்ளார்.

புற்றுநோய்:

யுவராஜ் சிங்கின் சொந்த தொண்டு நிறுவனமான வர்ன்ரங்ஈஹய் நிறுவனம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்க்கு சிகிச்சை அளித்தது வருகிறது. "புற்றுநோய் மரணம் அல்ல. அதுவே முடிவும் அல்ல. பயப்பட வேண்டாம். நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். பாசிடிவ் எண்ணத்துடன் இருங்கள். தயவுசெய்து எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.” என்று ஒரு நேர்காணலில் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் பாசிடிவ் ஆக இருந்த இவரது புற்றுநோய் உடனான போராட்டம், ரசிகர்களுக்கு இவர் மேல் இருந்த ஈர்ப்பை அதிகப்படுத்தியது. 

 

yuvaraj singh contribution to indian cricket

 

சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை, கங்குலியின் பல சாதனை வெற்றிகள், தோனியின் 2007 உலகக்கோப்பை என மூவரின் முக்கிய வெற்றிகளுக்கும் தளபதியாக இருந்தவர் யுவராஜ். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் இந்திய அணிக்கு எப்போதும் யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் கிடைக்கபோவதில்லை.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.