Skip to main content

"ஆனா அவரு இன்னும் ஐபிஎல் கோப்பையே ஜெயிக்கல" - விராட் கேப்டன்சி குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

raina virat

 

இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக தொடர்வது குறித்து விவாதங்கள் வலுத்துவருகின்றன. இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்கு கேப்டனாக அவகாசம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

விராட் கேப்டன்சி தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "அவர் (விராட்) நம்பர் 1 கேப்டனாக இருந்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது புள்ளிவிவரங்களே நிரூபிக்கிறது. அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு ஐ.சி.சி கோப்பையைப் (வெல்வதை) பற்றி பேசுகிறீர்கள், ஆனால் அவர் இதுவரை ஒரு ஐ.பி.எல் கோப்பையைக் கூட வெல்லவில்லை. அவருக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 2 - 3 உலகக் கோப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறவுள்ளன. இரண்டு டி20 உலகக் கோப்பைகள், பின்னர் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியை அடைவதென்பது எளிதல்ல. சில நேரங்களில் சில விஷயங்களில் கோட்டை விடுவீர்கள்" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இதற்கு ஒரு உதாரணம். (தோல்விக்கு) அந்தச் சூழல்தான் (condition) காரணம் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பேட்டிங்கில் ஏதோ குறைபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். பெரிய பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

 

மேலும் ஐசிசி தொடர்களில் தொடர் தோல்வியைச் சந்திப்பதால் இந்திய அணி, ஜோக்கர் என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து பதிலளித்த சுரேஷ் ரெய்னா. "நாம் ஜோக்கர்ஸ் அல்ல. ஏனென்றால் நம்மிடம் ஏற்கனவே 1983 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பைகள் உள்ளன. வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று உலகக் கோப்பைகள் நெருங்கிவருவதால், யாரும் அவர்களை ஜோக்கர்ஸ் என்று அழைப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நாம் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். விராட்டிடம் ஆட்டத்தை மாற்றும் திறன் உள்ளது. இந்த அணியின் புதிய பாணியை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அடுத்த 12 முதல் 16 மாதங்களில் ஐ.சி.சி கோப்பை இந்தியாவுக்கு வரப்போகிறது என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.