Skip to main content

இரண்டு இன்னின்ஸில் இரண்டு சாதனைகள் படைத்த இந்திய ஜுனியர் அணி கேப்டன் யாஷ் துள்!

Published on 20/02/2022 | Edited on 20/02/2022

 

yash dhull

 

19 வயதிற்குப்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் யாஷ் துள்லை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

இந்தநிலையில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி ட்ராபியில், டெல்லி அணிக்காக அறிமுகமான யாஷ் துள், தமிழகத்திற்கு எதிரான அப்போட்டியில் சதமடித்து, அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்தவர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா ஆகியோரோடு இணைந்தார்.

 

இதனை தொடர்ந்து யாஷ் துள் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ரஞ்சி ட்ராபியில் அறிமுகபோட்டியிலயே இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் யாஷ் துள்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 


 

Next Story

ரஞ்சி ட்ராபி தொடர்: உலக சாதனை படைத்த இளம் வீரர்!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

sakibul gani

 

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி ட்ராபி போட்டிகள், நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது நாளிலேயே 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் சதமடித்து சாதித்தார்.

 

அதன் தொடர்சியாக, ஃபார்ம் இன்றி தவித்து வந்த ரஹானே சதமடித்து அசத்தினார். அதேபோல் இளம் வீரரான சர்பராஸ் கான், இரட்டை சதமடித்தார். இந்நிலையில் பீகார் அணிக்காக அறிமுகமான சாகிபுல் கனி, தனது முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசியுள்ளார்.

 

மிசோரத்திற்கு எதிரான போட்டியில் அவர், 2 சிக்ஸர்கள் மற்றும் 56 பவுண்டரிகளுடன் 405 பந்துகளில் 341 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் தர போட்டிகளில், அறிமுக ஆட்டத்திலேயே முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 

 

 

Next Story

சச்சின், ரோகித் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் ஜுனியர் உலகக்கோப்பை அணி கேப்டன்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

yash dhull

 

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் யாஷ் துள்லை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

இந்தநிலையில் யாஷ் துள், இன்று தனது அறிமுக ரஞ்சி ட்ராபி போட்டியில் சதமடித்து அசதியுள்ளார். டெல்லி அணிக்காக களமிறங்கிய அவர், தமிழ்நாடு அணிக்கு எதிராக 113 ரன்களை எடுத்தார்.

 

இதன்மூலம் யாஷ் துள், அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்தவர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா ஆகியோரோடு இணைந்துள்ளார்.