Skip to main content

பும்ரா கண்ணில் காயம்... ஐபிஎல்-க்காக எடுக்கப்படும் ரிஸ்க்?

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி பேட்டிங்கில் விராட் கோலியை எந்தளவுக்கு நம்பியிருக்கிறதோ, அதே அளவிற்கு பவுலிங்கில் பும்ராவை நம்பியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளின்போது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டுமென கோலி மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

 

bumrah

 

ஐ.பி.எல். போட்டிகளுக்காக அதிக ரிஸ்க் எடுக்கப்படுவது போலவே தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் ஐ.பி.எல். போட்டியில் பும்ராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மேலும், அந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக மீண்டும் விளையாடினார். டெத் ஓவர் பவுலிங்கில் கலக்கி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
 

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிராக விளையாடியபோது பும்ராவின் கண்ணில் காயம் இருந்தது. வலது கண்ணுக்கு கீழ் வீக்கம் இருந்தது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. "கேட்ச் பயிற்சியின்போது பும்ரா கேட்சை மிஸ் செய்தார். அதனால் அவருக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்தார்.

 

ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ், முஹமது சமி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அடிக்கடி காயத்திற்கு உட்படக் கூடியவர்கள். ஏற்கனவே பேக் அப் ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லை. இந்த நிலையில் இவர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் அது பெரிய இழப்பாக இருக்கும்.     

 

கடைசி நேரங்களில் பல பரிசோதனைகள் மற்றும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செட்டில் ஆகாத இந்திய அணி 2007 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியது. பேட்டிங் லைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டது. லீக் சுற்றில் தோல்விகளை அடைந்து மோசமான உலகக்கோப்பை தொடராக அணிக்கு மாறியது. சில முக்கிய வீரர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டால், அது போன்றதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புண்டு.
 

2015 உலக கோப்பை போட்டிகளின்போது இந்திய அணிக்கு அறிமுகம் ஆகாமல் இருந்தார். 2016 ஜனவரி மாதம் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான பும்ரா குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தற்போது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் முன்னணி பவுலராக இருந்து வருகிறார். 

 

பேட்டிங்கிலும் முழுமையாக தயாரான பேக் அப் வீரர்கள் இல்லை. நம்பர் 4-ல் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு சொதப்பி வருகிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அதிகம் நம்பியுள்ளது. காயம் காரணமாக உலக கோப்பையின் சில போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விளையாட முடியாமல் போனால், அது அணியின் வெற்றியை பாதிக்கும். 
 

“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக கோப்பை தொடருக்கான அணியின் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு காம்பினேஷன்களை சோதனை செய்து பார்த்திருக்கிறோம். அறிவிக்கப்படும் அணி உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என இந்தியத் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகாவது  தேர்வான இந்திய வீரர்களுக்கு நடந்துவரும் ஐபிஎல் தொடரில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

 

 

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

ஐபிஎல் 2023; இன்ஸ்டாவை நம்பி ஏமாந்த இளைஞர்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

chennai mumbai match ipl cricket chepauk stadium related issue 

 

சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). ராயப்பேட்டையில் பட்டயக்கணக்கர் படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் ஐபிஎல் போட்டியை பார்க்க விரும்பி உள்ளனர். இதனால் கடந்த 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பெற முயன்றுள்ளார். அப்போது ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காததால் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர் மூலம் பெற நேரடியாகச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் கூட்டம் அலைமோதியதால் அவரால் அங்கும் டிக்கெட் பெற முடியவில்லை.

 

அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் பெயரில் இருந்த வலைதள பக்கத்தில்  ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு இருப்பதை பார்த்த அருண் அந்த பக்கத்தை தொடர்பு கொண்ட போது வினோத் யாதவ் என்பவர் அருணிடம் தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருக்கிறது என்று கூறியுள்ளார். டிக்கெட்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் இணைய வழியிலான டிக்கெட் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அருண் குமார் 20 டிக்கெட்களுக்கான கட்டணமாக 90 ஆயிரம் ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், அவர் கூறியபடி ஐபிஎல் டிக்கெட் கொடுக்காமல் வினோத் யாதவ் ஏமாற்றி உள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அருண் குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு வினோத் யாதவ் பணத்தை தர முடியாது என்று  கூறியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் அருண் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.