Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

 World Cup Cricket: Pakistan registered its first victory!

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது.  நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

இதன் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் இடையே ஹைதராபாத், ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவை எதிர்கொண்டாலும், சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தலா 68 ரன்கள் எடுத்து மீட்டனர். தொடர்ந்து, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் கணிசமான ரன்களை சேர்த்து இறுதிவரை அணிக்கு  பங்களித்தனர். இறுதியில், 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள்  குவித்தது. நெதர்லாந்தின் பவுலிங்கில், பாஸ் டே லீடே 4 விக்கெட்டுகளும், கொலின் 2 விக்கெட்டுகளும், லோகன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

இதனையடுத்து 287 ரன்கள் இலக்காக கொண்டு நெதர்லாந்து களமிறங்கியது. ஆரம்பத்திலே, மேக்ஸ் 5 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் கடந்த விக்ரம்ஜித் 52(67) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்தவர்களில்  பாஸ் டி லீட் 67(68) ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணியின் சிறப்பாக பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இறுதியாக நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. பாகிஸ்தான் பவுலிங்கில், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும், இப்திகர் அஹமது 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் பெற்றார்.

 

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.