Skip to main content

மகளிர் ஜீனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை; இந்தியா முதன்முறையாக சாம்பியன்

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

Women's Junior Hockey Asia Cup; India are champions for the first time

 

மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

 

ஜப்பானில் உள்ள ககாமிகஹாரா நகரில் மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தென் கொரிய அணி 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.  

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று முதன்முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய வீராங்கனைகளுக்கு ரூ. 2 லட்சம் ரூபாயும் துணைப் பணியாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் பரிசாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

 


 

Next Story

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பரிசுத்தொகை; தமிழக  அரசு அறிவிப்பு 

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

5 lakh each for Indian hockey players Tamil Nadu Government Notification

 

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்று வந்த  நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் நான்காவது முறையாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா, இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது. 9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.

 

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில், மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில்,  இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோப்பையை வழங்கி, வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து, வாழ்த்தினார். மேலும், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்ச ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 1 கோடியே 10 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

ஆசிய ஹாக்கி போட்டி-வாகை சூடியது 'இந்தியா'

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

 Asia Hockey Tournament-india won

 

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலபரிச்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா தற்போது 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் நான்காவது முறையாக ஆசிய ஹாக்கி கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

 

30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது.  9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.