Skip to main content

மகளிர் (ஐ)பிஎல்; வீராங்கனைகள் ஏல விபரம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Women's (I)PL; Players auction details

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 

 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும். 

 

இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டினர் உட்பட 90 வீராங்கனைகள் தேவைப்படும் நிலையில், 15 நாடுகளை சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். இவர்களில் 269 இந்திய வீராங்கனைகளும் 179 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடக்கம்.

 

இந்நிலையில், ஏலத்தின் முதல் சுற்றில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டிவைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியை ரூ. 1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஸ்லேக் ஹார்டெனரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா தாகூர் சிங்கை ரூ. 1.5 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனியை ரூ. 2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ. 3.2 கோடி என்ற அதிகமான தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் இதுவரை இதுதான் 2வது அதிகபட்ச தொகை ஆகும். இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ. 2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மா ரூ. 2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியால் வாங்கப்பட்டனர்.

 

 

Next Story

மும்பை அணி சாம்பியன்; பெண்கள் பிரீமியர் லீக்கில் அசத்தல்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

Mumbai Team Champion; The Women's Premier League is fantastic

 

பெண்கள் பிரீமியர் லீக்கில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

 

பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டிகள் இந்தாண்டு முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் என ஐந்து அணிகள் மோதின. 5 அணிகளும் தலா 8 லீக் போட்டிகளில் விளையாடியது. இத்தொடரில் இன்றைய இறுதிப் போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் லேன்னிங் மட்டும் 35 ரன்களை எடுத்து ஆறுதல் அளிக்க பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

 

இறுதியில் வந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடி தலா 27 ரன்களைக் குவிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியில் ஹெய்லி மாத்யூஸ், வோங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். மெயிலி கெர் 2 விக்கெட்களை எடுத்தார். 

 

132 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹெய்லி மாத்யுஸ் மற்றும் யாஸ்டிகா பாட்டியா ஏமாற்றம் அளித்தனர். பின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கர் மற்றும் ப்ரண்ட் அணியை சரிவில் இருந்து மீட்டனர். மெதுவாக மும்பை அணி வெற்றி இலக்கை எட்டிக்கொண்டு இருந்தபோது கேப்டன் ஹர்மன் ப்ரீத் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 19.3 ஓவர்களில் 134 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ப்ரண்ட் 60 ரன்களை குவித்தார்.

 


 

Next Story

பெண்கள் ப்ரிமீயர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

MI win the opening game against GG by 143 runs wpl

 

மும்பையில் இன்று முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடர் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், முதல் போட்டி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை அணியும் பெத் மூனி தலைமையில் குஜராத் அணியும் மோதியது.

 

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஸ்திகா பாட்டியாவும், ஹெய்லி மேத்யூஸ்சும் களமிறங்கினர். ஆனால் யாஸ்திகா பாட்டியா 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இறங்கியவர்கள் சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்த 22 பந்துகளில் அரை சதம் அடித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. 

 

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. ஆரம்பத்திலேயே அணியின் கேப்டன் பெத் மூனி காயம் காரணமாக வெளியேற அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹேமலதா 29 (23) ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக 15. 1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில்  தங்களது முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது.