Skip to main content

மீண்டும் மிரட்டுவாரா சூர்யா? வெற்றியை தொடருமா இந்தியா?

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Will Surya threaten again? Will India continue to win?

 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை (26.11.2023) கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் தடுமாறினாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.

 

இந்திய அணி அனுபவமில்லாத வீரர்களை நிறைய கொண்டிருந்த போதிலும், அந்த இளம் வீரர்களை வைத்தே அதிகபட்ச வெற்றிகரமான டி20 ரன்னை சேஸ் செய்தது. இது இந்திய இளம் வீரர்களிடையே முழு நம்பிக்கையை கொடுத்துள்ளது. முகேஷ் குமாரின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் பினிஷிங்,  இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டது. ஆனால் கேப்டனாக பந்து வீச்சை சீர்படுத்தும் பணி சூர்யாவின் முன் உள்ளது. பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். அதுபோக போன ஆட்டத்தில் மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகினர். அந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.

 

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் இங்லிஷ், டிம் டேவிட் என இரு அதிரடி வீரர்கள் உள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். டிம் டேவிட்டின் ஐபிஎல் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலம். பவுலிங்கில் ஆஸி வீரர்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், உலகக் கோப்பை இறுதி போல எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பும் வல்லமை படைத்த அணி. ஒவ்வொரு போட்டியையும் சவாலாக ஏற்று திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே சிறப்பான அணியாக ஜொலிக்க முடியும்.

 

திருவனந்தபுரம் ஆடுகளம் மெதுவாகத் திரும்பும். எனவே சுழற்பந்துக்கு அதிகம் சாதகமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்த போதிலும் நாளை போட்டியன்று மழைக்கான வாய்ப்பு குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்க உள்ளது.

- வெ.அருண்குமார் 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.