ADVERTISEMENT

விரல்களில் தையல்; இங்கிலாந்து தொடரில் இஷாந்த் ஷர்மா விளையாடுவாரா? - பிசிசிஐ அதிகாரி விளக்கம்!

06:09 PM Jun 25, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே கடந்த 18 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த போட்டியின் போது இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிற்கு வலது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்போது இஷாந்த் ஷர்மாவின் விரல்களில், தையல் போடப்பட்டுள்ளது. இதனால் இஷாந்த் ஷர்மா, அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் இஷாந்த் ஷர்மா, இங்கிலாந்திற்கெதிரான தொடரில் விளையாடுவர் என இந்திய கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், "இஷாந்த் ஷர்மாவிற்கு போடப்பட்ட தையல் 10 நாட்களில் பிரிக்கப்பட்டுவிடும். இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்க இன்னும் ஆறு வாரம் இருப்பதால், அதற்குள் இஷாந்த் ஷர்மா குணமடைந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT