Advertisment

விரல்களில் தையல்; இங்கிலாந்து தொடரில் இஷாந்த் ஷர்மா விளையாடுவாரா? - பிசிசிஐ அதிகாரி விளக்கம்!

ishant sharma

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே கடந்த 18 ஆம் தேதியிலிருந்து 23 ஆம்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவைவீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைவென்றது. இந்த போட்டியின் போது இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிற்குவலது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.

Advertisment

இதனையடுத்துதற்போது இஷாந்த் ஷர்மாவின்விரல்களில், தையல் போடப்பட்டுள்ளது. இதனால் இஷாந்த் ஷர்மா, அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் இஷாந்த் ஷர்மா, இங்கிலாந்திற்கெதிரானதொடரில் விளையாடுவர் என இந்திய கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர், "இஷாந்த் ஷர்மாவிற்கு போடப்பட்ட தையல் 10 நாட்களில் பிரிக்கப்பட்டுவிடும். இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்க இன்னும் ஆறு வாரம் இருப்பதால், அதற்குள் இஷாந்த் ஷர்மா குணமடைந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.

INDIA VS ENGLAND Ishant Sharma team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe