ipl

இந்தியாவில்ஐ.பி.எல் கிரிக்கெட்திருவிழா ஆண்டுதோறும்நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபுஅமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளை, இந்த ஆண்டு வழக்கம்போல் இந்தியாவில்,ஏப்ரல் - மே மாதத்தில்நடத்தஇந்தியகிரிக்கெட்வாரியம் முயற்சி செய்து வருகிறது.

Advertisment

இந்தநிலையில், இந்தியாவில்ஐபிஎல் போட்டிகளைநடத்தசென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் மற்றும் டெல்லிஆகிய ஐந்து மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்தியகிரிக்கெட்வாரியநிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில்நடப்பு சாம்பியன் மும்பைஇந்தியன்ஸின் வான்கடேமைதானம், இடம்பெறவில்லை. இதற்குமஹாராஷ்ட்ரா அரசு இன்னும் அனுமதியளிக்காததே காரணம்எனஅந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அம்மாநில அரசு அனுமதியளித்தால் வான்கடேமைதானத்திலும் போட்டி நடைபெறும்எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் ஐபிஎல் போட்டிகளின் பிளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியை, அகமதாபாத்தின் நரேந்திரமோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. உலகின்மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சமீபத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இது இந்த மைதானத்தில் நடைபெற்றமுதல் கிரிக்கெட்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.