Skip to main content

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர நாங்கள் விரும்பினோம். ஆனால்…

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், விராட் கோலிக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரவி சாஸ்திரி பற்றிய சர்ச்சைகள் சில மாதங்களாக அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அணி வீரர்களின் தேர்வு. இந்த நிலையில் வி.வி.எஸ்.லக்ஷ்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய சமயத்தில் நடந்தவை பற்றி குறிப்பிட்டுள்ளார். இது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

 

 

vv

 

 

சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு பிறகு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர்வதை  விராட் கோலி விரும்பவில்லை என அவருடைய கருத்துகளை பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகும் சச்சின், கங்குலி மற்றும் நான் அடங்கிய குழு, அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பினோம். ஆனால் அவர் வெளியேற விரும்பினார் என்று வி.வி.எஸ்.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

 

கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 2016-ஆம்  ஆண்டு  இந்திய  அணியின்  பயிற்சியாளராக முன்னாள்  டெஸ்ட்  அணி  கேப்டன் அனில்  கும்ப்ளேவை  தேர்வு  செய்தனர். அவர்   பயிற்சியாளராக பொறுப்பேற்ற  பின்பு  இந்திய  அணி  பல்வேறு சாதனைகள் படைத்தது. நடைபெற்ற ஐந்து  டெஸ்ட்  தொடர்களில்  வெற்றி  பெற்றது. 

 

கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 12 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும், 4 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது. கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 70.6% வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் 13 ஒருநாள் போட்டிகளில் 8 வெற்றியும், 5 தோல்வியும் அடைந்துள்ளது. வெற்றி பெற்றதை சதவிகிதம்படி பார்த்தால் 61.5% ஆகும். ஐந்து டி20 போட்டிகளில் 2 வெற்றியும், 2 தோல்வியும், ஒரு போட்டி முடிவு இல்லாமலும் போனது. வெற்றி பெற்றதை சதவீதத்தின்படி பார்த்தால் 40% ஆகும்.   

 

கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. இங்கிலாந்ததில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடருடன் அவருடைய பதவிக்காலமும் முடிவடைந்தது. ஆனால் கிரிக்கெட் ஆலோசனை குழு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பியது.

 

அணியில் வீரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட சில விஷயங்களில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவிற்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கோலி  பி.சி.சி.ஐ.யிடம் கும்ப்ளே கோச்சிங் ஸ்டைல் பற்றி தெரிவித்திருந்தார். ஆனால், கும்ப்ளே விலகியது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி எட்டமுடியாத உயரத்தை அடைந்தது. 

 

சமீபத்தில் கவுதம் கம்பீர் ஒரு பேட்டியில் ’தான் கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, எம்.எஸ்.தோனி ஆகியோர் தலைமையில் விளையாடி இருந்ததாகவும், இதில் கும்ப்ளேதான் சிறந்த கேப்டனாக என்னை கவர்ந்துள்ளார்’ என்றும் கூறியிருந்தார். அணியின் தேவையைவிட ஒரு சிலரின் தேவைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறதா? என்று கம்பீர் வினவியிருந்தார்.  

 

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0, நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள்  கொண்ட  தொடரில் 3-0 என்ற  கணக்கில் ஒய்ட் வாஷ்,  இங்கிலாந்து  அணியுடன்  5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  4-0, வங்க  தேச  அணியுடன்  ஒரே ஒரு  டெஸ்ட்  போட்டி  கொண்ட தொடரிலும் வெற்றி, பின்னர்  நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில்   ஆஸ்திரேலியா  அணியுடன் வெற்றி என்று அசத்தி வந்தது இந்திய அணி. 

 

கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. டெஸ்ட்  தொடரில்  மட்டுமல்ல; ஒருநாள்  தொடரிலும்  தொடரை  கைப்பற்றி  அசத்தியிருந்தது. நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதில் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும், எந்த வருடமும் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை. மேலும், கும்ப்ளே விலகலுக்கு பிறகு பயிற்சியாளர் நேர்முகத் தேர்வின்போது இரண்டாவது முறை ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கங்குலி கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

 

 


 

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Sachin excited about Virat Kohli's feat

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார்.  தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

Sachin excited about Virat Kohli's feat

 

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார்.