Advertisment

'நாங்கள் இந்தியர்கள்... இந்தியில் தான் பேசுவோம்' - ரோகித் சர்மா அதிர்ச்சியில் ரசிகர்கள்...

நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக விளையாட்டு வீரர்கள் வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார்கள். இன்று கூட முக்கிய வீரர்களுடன் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார். இதையும் தாண்டி, வீரர்கள் அனைவரும் அன்றன்றைக்கு நடக்கும் சுவாரசிய வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவும், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியில் பேசியுள்ளனர்.

Advertisment

j

அப்போது அந்த உரையாடலின் இடையே வந்த ரசிகர் ஒருவர் நீங்கள் இந்தியில் பேசுவதால் எங்களுக்கு புரியவில்லை என்றும், ஆங்கிலத்தில் பேசினால் எங்களுக்கு புரியுமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ரோகித், தொலைக்காட்சிகளில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசலாம், இங்கே பேச வேண்டிய அவசியமில்லை. “நாங்கள் இந்தியர்கள்,இந்தியில்தான் பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Rohit sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe