Skip to main content

என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்... ஓய்வை அறிவித்த பின் வாட்சன் உருக்கம்!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

watson

 

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் அதிரடி வீரர் வாட்சன் அறிவித்துள்ளார்.

 

சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற வாட்சன், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். நடப்பு தொடரில் சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதிய கடைசி போட்டியே வாட்சனுடைய கடைசி போட்டியென்றும், அவர் விரைவில் ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வாட்சன் உருக்கமாகப் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

அதில் அவர், "அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தற்போது ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" எனப் பேசியுள்ளார்.

 

இதனையடுத்து, வாட்சனுக்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் சென்னை அணி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

Next Story

“இதற்கு தோனியே மிக முக்கிய காரணம்” - தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் ஷேன் வாட்சன்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

"Dhoni is the most important reason for this" comments Shane Watson on Dhoni and his work

 

ஐபிஎல் போட்டித் தொடரின் 16 ஆவது சீசன் மார்ச் மாதம் 31 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி நடப்புச் சாம்பியனான குஜராத் அணியை சந்திக்க உள்ளது.

 

சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 11 முறை சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறக் காரணமாகவும் இருந்துள்ளார். சென்னை அணி வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரே தோனிக்கு கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் எனப் பலர் கூறி வருகின்றனர். மேலும், சென்னையில் விளையாடிய பின்பே ஓய்வு பெறுவேன் என தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

 

இந்நிலையில், சென்னை அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த ஐபிஎல் தோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தோனியால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியும். 

 

அவர் இன்றும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாகச் செயல்படுகிறார். தோனியின் ஆட்டத்தைப் போலவே அவரது தலைமையும் சிறப்பான ஒன்றாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் தன்மை தோனியை நல்ல தலைவனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமான ஒன்று. சி.எஸ்.கே வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு தோனி மிக முக்கிய காரணம்” எனக் கூறினார். ஷேன் வாட்சனின் இந்த கருத்து தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

Next Story

டெல்லி அணியுடன் கைகோர்த்த ஷேன் வாட்சன்!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

shane watson joins delhi team as assistant coach

 

உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வாட்சன். 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற வாட்சன், தற்போது முதன்முறையாக ஒரு அணிக்கு உதவி பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில், தற்போது உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.