Advertisment

ஐபிஎல் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் - மாற்று வீரரை அறிவித்த ஆர்.சி.பி!

washington sundar

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தற்போது மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பெறவுள்ளார்.

rcb ipl 2021 Washington Sundar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe