Advertisment

உலகக்கோப்பை அணியில் இடம்பெற ஆசை! - மனம்திறக்கும் க்ருனால் பாண்டியா 

Krunal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான பட்டியலில் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் இளம் கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியா.

Advertisment

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடக் கூடியவர் க்ருனால் பாண்டியா. இவர் அந்த அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இவரது சகோதரர் ஹர்தீக் பாண்டியா இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார். பேட்டிங், பவுலிங் என இரண்டு ஏரியாக்களிலும் சிறப்பாக செயல்படும் க்ருனால் பாண்டியாவால் இந்திய அணியில் ஏனோ இடம்பெற முடியாமல் இருந்தது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இந்த நிலையை மாற்றும் விதமாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் டி20 பிரிவில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் க்ருனால். ஆனால், மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெறும் கனவுகள் குறித்து க்ருனால் பாண்டியா பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் அவர் கலந்துகொண்ட நேர்காணலில், “என் தற்போதைய ஆசை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான். அதேபோல், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையும் இருக்கிறது. நேர்த்தியாக என் திறமையை வெளிப்படுத்தினால், நிச்சயம் நான் அணியில் எனக்கான இடத்தைப் பெறுவேன். இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தபோது, சகோதரர் ஹர்தீக்குடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தது நல்ல அனுபவம். ஒரே அணியில் விளையாடும் அந்த வாய்ப்பு மிகச்சிறந்தது” என தெரிவித்துள்ளார்.

indian cricket krunal pandya sports WorldCup
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe