Advertisment

சி.எஸ்.கே. வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்!

Sehwag

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் பெரும் சொதப்பலாக அமைந்துள்ளது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 2 வெற்றிகள், 4 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. முன்னணி வீரர்களின் சொதப்பலான ஆட்டம் மற்றும் நிலையான ஆட்டமின்மை சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் மூத்த வீரரான சேவாக், சென்னை அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் எளிதாக இலக்கை எட்டியிருக்கலாம். கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜாவின் மந்தமான ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை. சென்னை அணிக்காக விளையாடுவதை அவ்வீரர்கள் அரசு வேலை போல கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என்பது போல அவர்களது செயல்பாடு இருக்கிறது " எனக் கூறினார்.

Advertisment

CSK Sehwag
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe