Skip to main content

”அவர்கள் வீணாக வம்பு இழுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்...”- ஆஸ்திரேலிய ஸ்லெட்ஜிங் குறித்து கோலி அதிரடி....

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
v kohli


இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி என்றாலே ஸ்லெட்ஜிங்க்கும், சர்ச்சைக்கும் பஞ்சமே இல்லாதது. ஏற்கனவே அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பால் டாம்பரிங் செய்ததற்காக ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உதவிய துணை கேப்டன் டேவிட் வார்னரும் ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நிலை மிகவும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இந்த இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது, அணிக்கு பலம் குறைந்தும் ஸ்லெட்ஜிங்கிற்கு ஆள் குறைந்தும் உள்ளது.
 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து கேப்டன் கோலி அளித்த பேட்டியில், ”தற்போது கேப்டனாக இருப்பதால் அணியின் நலன் மற்றும் வெற்றி தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கம் நேரம் இல்லை. இதனால் கடந்த காலத்தைப் போல எந்தவிதமான மோதலும் உருவாகாது. நாங்கள் எப்போதும் வாங்குவதை திருப்பிக் கொடுப்பவர்களே தவிர பிரச்சனையை தொடங்குபவர்கள் இல்லை. ஆகையால் ஆஸ்திரேலிய வீரர்களுடன் எந்தவிதமான மோதலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்பினால் திருப்பி கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் வீணாக வம்பு இழுத்தால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.