Advertisment

பலரும் எங்களை நம்பாத வேளையில் இவர்கள்தான் நம்பினார்கள் - விராட் கோலி பேச்சு!

Virat Kohli

Advertisment

13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 39-ஆவது லீக் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 7 வெற்றிகள், 3 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வெற்றிக்குப் பின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், "துவக்க ஓவர்களை முதலில் வாஷிங்டன் சுந்தருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சிராஜிற்கு ஓவர் கொடுக்க வேண்டும் என்பது தாமதமாக எடுத்த முடிவு. எங்களிடம் இரு திட்டம் இருந்தது. வீரர்கள் சிறப்பாக அதைச் செயல்படுத்திக் காட்டினார்கள். அதனால்தான் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. நிறைய பேருக்கு பெங்களூரு அணி மீது நம்பிக்கை இல்லை. அணி நிர்வாகத்திற்கும், சக வீரர்களுக்கும் நம்பிக்கை இருந்தது" எனக் கூறினார்.

rcb virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe