Skip to main content

சாதிக்க தயாராகும் டிராவிட்டின் இளம்படை

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

fhgn

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் கே. எல்.ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்கு பதிலாக 19 வயதே ஆன சுப்மான் கில் மற்றும் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். விஜய் சங்கர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியில் இணைந்து கொள்வார். சுப்மான் கில் நியூசிலாந்து தொடரில் அணியில் இணைவார். 

தேர்வு செய்யப்பட்ட அன்று இரவு ஒரு மணியளவில் இந்திய அணிக்கு தேர்வான செய்தி வந்தது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியை கேட்டு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து இணையதளத்தில் பார்த்து விஜய் சங்கர் மற்றும் என்னை தேர்வு செய்ததை நான் உறுதி செய்து கொண்டேன் என சுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய ஏ அணி, இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் வென்ற இந்திய பி அணி, நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் வென்ற இந்திய ஏ அணி, உள்நாட்டில் நடைபெற்ற தியோதர் போட்டியில் வென்ற இந்திய சி அணி ஆகியவற்றில் அதிக பங்களிப்பு அளித்த சுப்மான் கில்லின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட உலககோப்பை தொடரில் 372 ரன்கள் மற்றும் 124 சராசரி எடுத்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.  

2018-2019 ரஞ்சிகோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய சுப்மான் கில் 9 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1089 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு இளம் வீரராக அனைத்து திறமைகளும் அவருக்கு உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் சுப்மான் கில் ஒரு சிறந்த வீரராக இருப்பார் என்று யுவராஜ் சிங் கூறியிருந்தார்.

சுப்மான் கில் ப்ரித்வி ஷாவை  விட சிறந்த வீரர், இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரின் ஆட்டத்தை கலந்து விளையாடக்கூடியவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருந்தார்.  

 

yjn


இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆட்டங்களை முடிக்க விஜய் சங்கரின் திறமையை நம்புகிறார். சங்கர் 5-வதாக பேட்டிங் செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று டிராவிட் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி டி-20 தொடரில் கடைசி போட்டியில் விஜய் சங்கர் கடைசி ஓவரில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டு சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்தனர். ஆனால் ராகுல் டிராவிட் சங்கரின் திறமைகளை நம்பியதால் இந்தியா ஏ அணிக்கு விளையாடுவதில் அதிக நம்பிக்கையளித்தார். 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற 300 ரன்கள் தேவைப்படும் போது விஜய் சங்கர் நான்காவது இடத்தில் பேட் செய்து, 87 ரன்கள் எடுத்தது அணி வெற்றி பெற உதவியாக இருந்தது. மற்றொரு ஆட்டத்தில்  60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

விஜய் ஹசாரே டிராபியில் ஒரு போட்டியில் நான்கு முதல் ஐந்து ஓவர்கள் பந்து வீசினாலும் ரஞ்சி டிராபியில் போட்டிகளில் அதிக ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்தது. விளையாட்டில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறேன். நிறைய அனுபவம் கிடைத்தன. கடினமாக உழைத்து மனநிறைவுடன் உணர்கிறேன். நான் உலகக் கோப்பை தொடர் பற்றி  நினைக்கவில்லை.  அப்படி நினைத்துக்கொண்டால் என்னால் சுதந்திரமாக விளையாட முடியாது. நான் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சங்கர் கூறியுள்ளார். 

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.