Skip to main content

வயாகாம் 18 பிராண்டு தூதராக களமிறங்கும் எம்.எஸ்.தோனி 

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Viacom 18 brand ambassador dhoni

 

இந்திய மக்களின் பேரன்பை பெற்ற கிரிக்கெட் வீரரும், நான்கு முறை ஐபிஎல் போட்டியை வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ். தோனி தங்களது நிறுவனத்தின் பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை வயாகாம் 18 அறிவித்திருக்கிறது. நேரலையாக விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதை டிஜிட்டலோடு ஒருங்கிணைந்ததாக ஆக்க வேண்டுமென்ற வயாகாம்18–ன் தொலைநோக்குத் திட்டத்தை தோனி முன்னெடுத்துச் செல்வார் என்றும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

 

கிரிக்கெட் உலகில் அதிகம் மதிக்கப்படும் வீரர்களுள் ஒருவரான தோனி, தங்களது மனம் கவர்ந்த விளையாட்டை கண்டு ரசிக்க டிஜிட்டலை ரசிகர்களின் அதிகம் விரும்பப்படும் செயல்தளமாக ஆக்குவதற்கு வயாகாம்18 உடன் இணைந்து செயல்படுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனி, ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் அவரது சமூக ஊடக கணக்குகளில் இடம்பெறவிருக்கும் இந்த வலையமைப்பின் பல முன்னெடுப்புகளில் பங்கேற்பார். 'தல' என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜியோ சினிமாவில் விரைவில் ஒளிபரப்பப்படவிருக்கும் டாடா ஐபிஎல் விளம்பர படத்தில் தோனி இடம்பெறுவார்.  

 

உங்களது சொந்த இல்லத்தில் சௌகரியமாக அமர்ந்திருக்கும்போதோ அல்லது வெளியிடங்களில் இருக்கும்போதோ உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சிகளை இணைந்து செயல்படும் திறன், விருப்பத்தேர்வு மற்றும் தனிப்பயனாக்கல் ஆகிய அம்சங்களோடு பார்க்கும்போது தான் அதனை மிகச்சிறப்பாக ரசித்து அனுபவிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இத்தகைய அம்சங்களை எல்லாம் ஒரு டிஜிட்டல் செயல்தளத்தால் மட்டுமே வழங்க முடியும். ஒருவரால் கற்பனை செய்ய முடியாத வழிமுறைகளில் ரசிகர்களோடு பிணைப்பினை செய்வதன் மூலம் இச்செயல்பாட்டை ஜியோ சினிமா முற்றிலும் புதிய உயரத்திற்கு எடுத்துச்செல்கிறது. இந்த முன்னுதாரண மாற்றம் தான் விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்கான எதிர்காலமாக திகழப்போகிறது என்பதால், இதன் ஒரு அங்கமாக பங்கேற்பதற்கு நான் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.” என்று எம்எஸ். தோனி கூறினார். 

 

“எம்எஸ் தோனியின் தலைமைத்துவ பண்பும், விளையாட்டின் போக்கையே மாற்றியமைக்கும் திறனும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரது எளிமையான, இனிமையான ஆளுமைத்திறன், வெளிப்படைத் தன்மையையும், உண்மைத்தன்மையையும் பெரிதும் மதிக்கும் டிஜிட்டல் ஆர்வலர்களை சிறப்பாக ஈர்க்கிறது. விளையாட்டில் நிகரற்ற அளவுகோல்களை நிறுவி, மிக விரைவாக பெறும் வளர்ச்சி கண்ட சாதனையாளரான தோனியின் பண்பியல்புகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை டிஜிட்டலில் தான் மிகச்சிறப்பாக கண்டு ரசிக்க முடியும் என்ற எங்களது குறிக்கோள் மற்றும் செயல்திட்டத்தோடு மிகச்சிறப்பாக ஒத்துப்போகின்றன.” என்று வயாகாம்18 - ஸ்போர்ட் பிரிவின் தலைமை செயல் அலுவலர் திரு. அனில் ஜெயராஜ் கூறினார். 

 

“யதார்த்த நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கின்ற மற்றும் புத்தாக்கம் செய்கின்ற அவரது உள்ளார்ந்த திறனின் வழியாகவே எம்எஸ். தோனி தொடர்ந்து வெற்றிச் சிகரங்களை எட்டி வருகிறார். வயாகாம்18 – ன் டிஜிட்டல் ஃபர்ஸ்ட் என்ற புரட்சிகரமான திட்டத்திற்கு மிகப்பொருத்தமான நபராக இதுவே எம்எஸ். தோனியை நிலைநிறுத்துகிறது. இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் தோனியின் ஈர்ப்புத்திறன், நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் இருக்கின்ற அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை சென்றடைய வேண்டும் என்ற இந்த வலையமைப்பின் பெருவிருப்பத்தை நிஜமாக்குவது நிச்சயம்,” என்று எம்எஸ். தோனியின் மேலாளர் (மைதாஸ் டீல்ஸ்), திரு. சுவாமிநாதன் சங்கர் கூறினார். 

 

டாடா இந்தியன் பிரீமியர் லீக் - ன் (ஐபிஎல்) 2023 சீசன், வரும் மார்ச் 31-ம் தேதி, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தற்போதைய சேம்பியன்ஸ் அணியான குஜராத் டைட்டன்ஸ், எம்எஸ். தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் நிகழ்வோடு தொடங்கவிருக்கிறது. இந்த சீசனுக்கு எந்த கட்டணமுமின்றி, அனைத்துப் போட்டிகளும் ஜியோ சினிமாவின் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கும் கூடுதலாக, டாடா ஐபிஎல் - ன் 2023 போட்டித்தொடர் முழுவதிலும் 700 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்நெட் பயனாளிகளுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு, சேர்ந்து விளையாடும் (பிளே அலாங்) சிறப்பம்சம் ஆகியவற்றின் வழியாக இன்டராக்டிவிட்டி, 4K ஃபீடு, பல்வேறு – மொழிகளில் மற்றும் மல்ட்டி-கேம் பிரசன்டேஷன் என பல சிறப்பம்சங்களை ஜியோ சினிமா வழங்கும்.  ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கப்பெறும் ஜியோ சினிமா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் விமன்ஸ் ப்ரீமியர் லீக் போட்டிகளை தற்போது நேரலையாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.  

 

ஜியோ சினிமாவை (iOS & ஆண்ட்ராய்டு) பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்கள் மனதிற்குப் பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் தொடர்ந்து கண்டு ரசிக்கலாம். மிக சமீபத்திய நிகழ்நிலைத் தகவல்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் மீது ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் மீது ஜியோசினிமாவையும் ரசிகர்கள் பின்தொடரலாம்.
 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

அவமதிப்பு வழக்கு; எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Supreme Court orders MS Dhoni for Contempt case

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.