Skip to main content

யாருக்கும் தெரியாத சச்சின் கதை - பகிர்ந்த சேவாக்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

sachin

 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு நிகரான பரபரப்புக் கொண்ட விஷயம் இந்தியாவில் வேறு இல்லை எனலாம். பாகிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சில் விக்கெட் விழுவதே அவமானமாக நினைக்கும் மக்களும் இருந்த அந்த காலகட்டத்தில் , போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியிடம் வசைச் சொற்களை வாங்கிக்கொண்டே சச்சின் 98 ரன்கள் எடுத்து அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற ஒரு சம்பவமும் நடைபெற்றது. 2003ல் நடந்த இந்த போட்டியை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தற்போது நினைவு கூர்ந்துள்ளார் இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக். 

 

அவர் அந்த தனியார் நிகழ்ச்சியில் "சச்சின் எப்போதும் அவருக்கு ரன்னர் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால் அவருக்கு தெரியும் 'நான் வந்தால் அவரைப்போல் ஓடுவேன்' என்பது. அப்பொழுது அங்கு எந்தவிதமான தவறான புரிதலுக்கும் இடம் இருக்காது.

 

பாகிஸ்தான் உடனான போட்டியில் அவருக்குத் தசைப் பிடிப்பு இருந்ததால் அவருக்கு ரன்னராக நான் ஓட வந்தேன். அப்போது பாகிஸ்தான் அணியின் அப்ரிடி அவரை அதிகம் வசை பாடினார். ஆனால் அவருக்கு, தான் கிரீஸில் இருப்பது முக்கியம் எனத் தெரிந்ததால் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். மேலும் அந்த சமயம் 'டாப் ஆர்டரை முற்றிலுமாக அழித்துவிடுவேன்' என அக்தர் பேசியது எனக்கு நினைவில் உள்ளது. ஆனால் அதை நானும் சச்சினும் அப்போது படிக்கவில்லை. இருந்தாலும் சச்சின் இன்னிங்சின் முதல் ஓவரிலேயே 18 ரன்கள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தார்" இவ்வாறு கூறினார்.  

 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் சச்சின் அடித்து ஆடியதால் 45.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக சச்சின் 98 ரன்கள் எடுத்தார்.

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.