Skip to main content

ராகுலுக்கு பதில் இஷான் கிஷன்; மேலும் இருவருக்கு காயம்;  புதிதாக மூவர் தேர்வு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Two others were injured; Ishan Kishan to replace Rahul; Selection committee in confusion

 

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு ஆல்ரவுண்டரான குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். 

 

காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ராகுலின் விலகலைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளிலும் லக்னோ அணியின் கேப்டனாக குருணால் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகினார். ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையில் தொடர்ந்து கே.எல்.ராகுலும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

 

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததை ஈடு செய்யும் விதமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஹானேவை போல் கே.எல்.ராகுல் வெளியேறியதை ஈடு செய்ய யார் அணியில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Two others were injured; Ishan Kishan to replace Rahul; Selection committee in confusion

 

மேலும் பந்துவீச்சுப் பயிற்சியின் போது காயமடைந்த ஜெயதேவ் உனத்கட் மற்றும் பெங்களூர் கொல்கத்தா இடையே நடைபெற்ற போட்டித் தொடரின் போது காயமடைந்த உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும் இருவீரர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் இருவரின் பங்கேற்பு குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேண்ட் பை வீரர்களாக ருதுராஜ், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, “ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ். பாரத் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன்.

 

காத்திருப்பு வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.

 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

எல்லோருக்கும் 100%.. கில்லுக்கு மட்டும் 115%.. அபராதம் விதித்த ஐசிசி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

100% for all.. 115% for Subaman Gill.. fined by ICC

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் போலண்ட் வீசிய 8 ஆவது ஓவரில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். க்ரீன் தனது இடது கையால் பந்தை பிடித்தாலும் பந்து தரையில் பட்டது போல் காணப்பட்டது. கள நடுவர் மேல்முறையீட்டிற்கு செல்ல மூன்றாம் நடுவர் அவுட் என முடிவு வழங்கினார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

 

கடந்த 10 ஆம் தேதி சுப்மன் கில் தனது ட்விட்டர் பதிவில் க்ரீன் பந்தை பிடித்த காட்சியை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார். அதில் பூதக்கண்ணாடியையும் தலையில் அடித்துக் கொள்ளும்படியான எமோஜியையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவரின் முடிவை விமர்சனம் செய்ததாக சுப்மன் கில்லுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதமும் ஆஸ்திரேலிய அணிக்கு 80% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சுப்மன் கில்லுக்கு 115% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.