இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

top 3 indian batsman got out for one run and makes a weird record

Advertisment

Advertisment

நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 47 ஆவது ஓவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் டே விதிப்படி நேற்று கைவிடப்பட்ட இடத்திலிருந்து, இன்று மதியம் முதல் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் அடித்தது.

240 என்ற வெற்றி இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் 5 ரன்களை சேர்ப்பதற்கு முன்னரே முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல், ரோஹித், கோலி ஆகியோர் தலா1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் 3 பேட்ஸ்மேன்களும் ஒரு ரன்னில் அவுட் ஆவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் 3 பேட்ஸ்மேன்களுமே ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததில்லை.