Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஏமாற்றம் அளித்த தீபிகா குமாரி!

deepika kumari

Advertisment

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதன்தொடர்ச்சியாக பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியா பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், மகளிர் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தோல்வியடைந்துள்ளார்.

காலிறுதியில் அவர், தென்கொரியவீராங்கனை ஆன் சானிடம் தோல்வியடைந்து, போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் தீபிகா குமாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

tokyo olympics DEEPIKA KUMARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe