Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸின் ஏழாவது நாள்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

pv sindhu and satish kumar

Advertisment

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டியடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின்ஏழாவது நாளான இன்று (29.07.2021), இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின்மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

அதேபோல், குத்துச்சண்டைஹெவி - வெயிட்பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனைவீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். வில்வித்தையில் இந்திய வீரர்அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

satishkumar PV Sindhu tokyo olympics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe