Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மேரிகோம் தோல்வி!

mary kom

Advertisment

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டியடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்தநிலையில்இன்று நடந்த போட்டிகளில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின்மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல், குத்துச்சண்டைஹெவி வெயிட்பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனைவீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தையில் இந்திய வீரர்அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இன்று முன்னேறினார்.

இந்தநிலையில், தற்போது நடைபெற்ற (51 கிலோ பிரிவு) குத்துசண்டைபோட்டியில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், இந்தியாவின் மேரி கோம்கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவிடம் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

mary kom tokyo olympics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe