Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மேரிகோம் தோல்வி!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

mary kom

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

இந்தநிலையில் இன்று நடந்த போட்டிகளில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல், குத்துச்சண்டை ஹெவி வெயிட் பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இன்று முன்னேறினார்.

 

இந்தநிலையில், தற்போது நடைபெற்ற (51 கிலோ பிரிவு) குத்துசண்டை போட்டியில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், இந்தியாவின் மேரி கோம் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவிடம் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

 

Next Story

மணிப்பூரில் பயங்கர கலவரம்; பிரதமரிடம் உதவி கேட்ட மேரி கோம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும் பழங்குடி அல்லாத சமூகங்களும் உள்ளன. மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 

 

இந்நிலையில், அம்மாநிலத்தின் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைந்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் பேரணி நடத்தியது. அதேசமயம், இவர்களுக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பினரும் தங்களது பேரணியை நடத்தினர். இதில், சவ்ரசந்திரபூர் எனும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு கலவரமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கலவரம் நடந்த இடத்தில் கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களை கலைத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help
பிரேன் சிங்

 

இந்நிலையில், நேற்றிரவு மணிப்பூரின் சில இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான மற்றும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் மணிப்பூரில் குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திலும், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களிலும் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

 

முன்னதாக மணிப்பூர் பாஜக அரசு, பாதுகாக்கப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட்ட காடுகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

 

அதேபோல், கடந்த வாரம் மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங் அம்மாநிலத்தின் சூராசந்த்பூர் பகுதியில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்தப் பகுதிக்கு வருகை தரவிருந்தார். ஆனால், அவரது வருகைக்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 28ல் இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் பிரேன் சிங் பங்கேற்க இருந்தார். ஆனால், அதற்கு முன்தினமான 27ம் தேதி சில மர்ம நபர்கள் முதல்வர் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும், முதல்வரின் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. 

 

தற்போது ஏற்பட்டுள்ள பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையேயான கலவரத்தின் காரணமாக அங்கு ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

 

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help
மேரி கோம்

 

மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்துள்ளார். 

 

 

Next Story

இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடியது இவைகளைத்தான் - ரீவைண்ட் 2021

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

இரண்டும் இரண்டும் எவ்வளவுன்னு கேட்டாலே ஃபோனில் கால்குலேட்டரை ஓப்பன் செய்யும் நாம், எந்த சந்தேகம் வந்தாலும் முதலில் திறப்பது கூகுளைத்தான். கூகுளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அதன் பயன்பாட்டை ஏகத்துக்கு உயர்த்தியுள்ளது. எல்லா வகையான தகவல்களையும் மக்கள் கூகுளில் தேடும் நிலையில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவ்வாண்டில் அதிகம் தேடப்பட்டவை என்ன என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ல் இந்தியர்களால் அதிகமாக தேடப்பட்டவைகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது கூகுள். கூகுளின் புள்ளிவிவரப்படி 2021 -ல்  இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியவை என்ன என்பதை பார்ப்போம்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவை (பொதுவானவை)

இளந்தலைமுறை அதிகமாக இருக்கும் இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட் மோகம் கொஞ்சம் அதிகம் தான். அதிலும் ஐ.பி.எல். என்றால் சொல்லவே வேண்டாம். கரோனாவால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட்டது. ரொம்ப தொலைவில் தொடர் நடந்ததாலோ என்னவோ நம்ம ஆளுங்க கிரிக்கெட்டை அதிகமாக தேடிட்டாங்க போல. இதனால், இப்பட்டியலில் முதலிடத்தை ஐ.பி.எல். தொடர் பிடித்துக்கொண்டது. அதேபோல, மூன்றாவது இடத்தை டி20 உலக கோப்பை பிடித்தது. கோவிட் தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின் இப்பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக யூரோ கோப்பை கால்பந்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோபா அமெரிக்க தொடர் ஆகியவை முறையே நான்கு, ஐந்து மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் கோவிட் தடுப்பூசியும், ஏழாவது இடத்தில ஃப்ரீ ஃபயர் மொபைல் கேமும் இடம்பிடித்துள்ளன. இவை மட்டமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பற்றியும் இந்தியர்கள் அதிகளவில் தேடியுள்ளார். இதன் காரணமாக, இப்பட்டியலில் அவரது பெயர் ஒன்பதாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இப்படி சாதனை இளைஞரை பற்றி தேடியது போலவே சர்ச்சை இளைஞரான ஆர்யன் கானையும் 2021 -ல் மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளார். இதன் காரணமாக அவரும் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

எனக்கு அருகில் இருக்கும்...

2020 -ல் மரண பயத்தை காட்டிய கரோனா 2021 -ல் மெல்ல குறைந்துவிடும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்தபோது, மார்ச் மாதத்தில் பரவ தொடங்கியது அதன் இரண்டாவது அலை. புதிய திரிபுகள், அதிகரித்த பரவல் என மக்களை மீண்டும் ஆட்டுவித்தது கரோனா. இதன் காரணமாக இந்த ஆண்டு ‘எனக்கு அருகில்’ (Near Me) தேடல்கள் பெரும்பாலும் கரோனா தொற்று தொடர்பான சேவைகளைச் சுற்றியே இருந்தன. தடுப்பூசிகள், கோவிட் சோதனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எங்கு கிடைக்கும், கோவிட் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் CT ஸ்கேன்கள் ஆகியவை அதிகம் தேடப்பட்ட இடங்கள் பட்டியலில் முறையே 1,2,4,5,7 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இவற்றிற்கிடையே உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி குறித்த தேடல்கள் மூன்று மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. டிரைவிங் ஸ்கூல் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்...

2021ஆம் ஆண்டு இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா. இந்திய ராணுவத்தின் தரைப்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ரா, இதற்கு முன் பல போட்டிகளில் பற்பல பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் அவர் அடித்த தங்கம் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆவாரை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது எனலாம். பதக்கம் வென்ற நாளிலிருந்து இவரை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் செய்த இந்தியர்கள் இவரது சமூக வலைதள கணக்கையும் அதிகளவில் பின்தொடர துவங்கினர். இவருக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இருப்பவர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் வழக்கில் கைதான இவர் அதன் காரணமாக இவ்வாண்டு கூகுளிலும் அதிகம் தேடப்பட்டார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை நடிகை ஷெனாஸ் கில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், நடிகர் விக்கி கொளசல், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, சுஷில் குமார் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் பிடித்துள்ளனர்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட படங்கள்...

இந்தியர்களின் உணர்விலிருந்து என்றைக்குமே பிரிக்க முடியாத ஒரு விஷயம் என்றால் அது சினிமா தான். வீக்எண்ட் என்றாலும் சரி, விசேஷம் என்றாலும் சரி, நமக்கு முதலில் மனதில் உதிக்கும் பொழுதுபோக்கு சினிமா தான். இப்படிப்பட்ட சினிமா இவ்வாண்டில் திரையரங்குகளை கடந்து ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்றது எனலாம். 2021 -ல் கரோனா பரவலால் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், அதிக அளவிலான படங்கள் ஓடிடி -யிலும் வெளியானது. இப்படி வெளியான திரைப்படங்களில் மக்கள் அதிகம் தேடியது எந்த படம் என்பது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட தவறவில்லை. அதன்படி, சூர்யா நடித்த ஜெய் பீம் படம்தான் இந்த ஆண்டு மக்களால் அதிகம் தேடப்பட்ட படமாக இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஓடிடி -யில் ரிலீஸ் ஆகி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தே ஆகணுமே என ரசிகர்களை ஏங்கவைத்த ஒரு படமென்றே இதனை சொல்லலாம். இதேபட்டியலில் இன்னொரு தமிழ் படமும் உள்ளது. ஜெய் பீம் படத்துக்கு மாறாக தியேட்டரில் வெளியாகி ரசிகர்களால் விசில் பறக்க கொண்டாடி பார்க்கப்பட்ட மாஸ்டர் தான் அந்த படம். மாஸ்டர் இப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர ஷெர்ஷா, ராதே, பெல் பாட்டம், எடர்னல்ஸ் ஆகிய படங்கள் முறையே இரண்டு முதல் ஐந்தாவது இடங்கள் வரை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்...

2020 ஆம் ஆண்டில் கரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீட்டிலேயே முடங்கியிருக்க, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் கூட தள்ளிவைக்கப்பட்டன. இதனால் 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல விளையாட்டு நிகழ்வுகள் 2021 -ல் நடந்தன. அதிலும் பல தொடர்களில் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் கடந்துதான் இவ்வாண்டு நடைபெற்ற பல தொடர்கள் விளையாட்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்தன. கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக், பராலிம்பிக் என பல போட்டிகள் இந்த ஆண்டில் வரிசையாக நடைபெற்றது. இதில் இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டது ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தான். இவற்றிற்கடுத்து, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்ச் ஓபன், லா லிகா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

என்னவா இருக்கும்...?


எதாவது ஒரு  புது பெயரையோ, நிகழ்வையோ கேள்விப்படும்போது அதை பற்றி எப்படியாவது உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் மக்களிடையே அதிகம். அப்படி அவர்களின் கேள்வி ஆர்வத்திற்கு தீனி போடுவதில் முக்கிய பங்கு கூகுளுக்கு தான். அப்படி எந்த விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் கூகுளில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலில் கருப்பு பூஞ்சை முதலிடம் பிடிக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன.? என்ற கேள்வியே இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட கேள்வியாக உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களை, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது..? தலிபான் என்றால் என்ன..? ரெம்டெசிவிர் என்றால் என்ன..? ஸ்டெராய்டு என்றால் என்ன..? ஸ்க்விட் கேம் என்றால் என்ன..? போன்ற கேள்விகள் பிடித்துள்ளன.

 

fadf

 

அதிகம் தேடப்பட்ட செய்திகள்...

ஊடகம் என்பது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், செய்தித்தாள் படிக்கும் தலைமுறையும், தொலைக்காட்சிகளில் செய்தி பார்க்கும் தலைமுறையும் கூட ஏதேனும் ஒரு செய்தியின் சமீபத்திய அப்டேட்டை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் உடனடியாக செல்லும் இடம் கூகுள் தான். அப்படி மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் முதலிடத்தை பிடித்துள்ளது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். இதற்கடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தானை பற்றிய செய்திகள், மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகள் பிடிக்கின்றன. மேலும், ஊரடங்கு குறித்த செய்திகள், சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியது, விவசாய போராட்டம் ஆகியவையும் இப்பட்டியலின் டாப் 10 -ல் வருகின்றன.