Advertisment

கோப்பையை வென்ற தமிழ்நாடு - பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

mk stalin

2021 - 2022ஆம் ஆண்டுக்கானசையத் முஸ்டாக் அலி டிராஃபியின்(இருபது ஓவர்) இறுதிப் போட்டி நேற்று (22.11.2021) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா 151 ரன்கள் எடுத்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணிக்கு கோப்பையைவெல்ல கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இந்தநிலையில்தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாகசையத் முஸ்டாக் அலி டிராஃபியைதமிழ்நாடு வென்று சாதனை படைத்தது.

Advertisment

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற தமிழ்நாடு அணிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

mk stalin Syed Mushtaq Ali Trophy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe