Advertisment

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்கள்!

rcb and rr

Advertisment

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாகநடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் கரோனாதீவிர பாதிப்பைஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகள் தேவையா என விவாதங்கள் எழுந்துள்ளன. கரோனா பரவலின் காரணமாக இந்திய வீரர் அஸ்வின், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகினார்.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய வீரர்களும்ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவில் கரோனாஅதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர். இதனைஆஸ்திரேலியகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்காக எடுக்கப்பட்ட மற்றொரு ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ டை ஏற்கனவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களின் விலகல், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ipl 2021 Rajasthan royals rcb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe