Skip to main content

திரும்ப வந்துட்டேனு சொல்லு... த்ரில்லர் கதையை மிஞ்சும் ஹர்திக் - மும்பை இந்தியன்ஸ் பின்னணி தகவல்கள்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Tell Me I'm Back... Thriller Narrative Hardik - Mumbai Indians Background Information

 

ஐ.பி.எல் மினி ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐ.பி.எல் அணிகள் தங்களுடைய தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் எல்லா அணிகளும் தங்களுடைய தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும், ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலையும் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. பல்வேறு அணிகளில் இருந்தும் முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு, சரியாக விளையாடாத அதிக தொகை கொண்ட வீரர்கள் மற்றும் சில வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வர உள்ளதாகவும், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குஜராத் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. பின்பு ரோகித் சர்மா மும்பையிலே தொடர்கிறார் எனவும், ஹர்திக் பாண்டியா திரும்பவும் மும்பை அணிக்கு வாங்கப்படுகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் இது வதந்தியாக இருக்குமோ என்று பல கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் கணித்தனர். அதன்படியே இது புரளிதான் என்று எண்ணும் அளவுக்கு நேற்று மாலை குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் ரோஹித் சர்மாவும் மும்பை அணியில் தக்க வைக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

 

கேமரூன் கிரீனை குஜராத்துக்கு வழங்கி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்க போகிறது என்றும் ஒரு தகவல் பரவி வந்தது. அதுவும் கடைசி நேரத்தில் கேமரூனை மும்பை அணி தக்க வைத்ததன் மூலம், அதுவும் இல்லை என்று உறுதியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இரவு 7 மணி போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா  வாங்கப்பட்டார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்தது. அதேபோன்று மும்பை அணியின் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரான கிரீன் 17.5 கோடிக்கு பெங்களூரு அணிக்கு விற்கப்பட்டார் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தன. மும்பை அணியில் இருந்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மற்றொரு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரும் விடுவிக்கப்பட்டார்.

 

குஜராத் அணியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்களில் ஒரு சீசனில் கோப்பையை கைப்பற்றியும், மற்றொரு சீசனில் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை முன்னேற்றியும் சிறப்பான தலைமை பண்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், இவரை ஏன் குஜராத் அணி ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. தற்பொழுது இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

ஹர்திக் பாண்டியாவுக்கும் குஜராத் அணிக்கும் இடையே கருத்து முரண்கள் எழுந்ததாகவும், அதனால் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல முயற்சித்ததாகவும் தகவல்கள் கசிந்தன. மும்பை அணி ஹர்திக் பாண்டியா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் அரசல்  புரசலாக பேசப்பட்டன.

 

ஆனால், குஜராத் அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி தற்போது அளித்துள்ள உள்ள தகவலில், ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்களாக எங்கள் அணியை ஒரு முறை சாம்பியனாகவும், மறுமுறை இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றார். ஆனால், அவர் தன்னுடைய சொந்த அணி என்று கருதும் மும்பை அணிக்கு செல்ல விரும்பியதால், நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம் என்று கூறினார். ஹர்திக் பாண்டியா 15 கோடி கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அந்த இழப்பைச் சரிகட்ட கேமரூன் கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 17.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். மேலும் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் மூலமும் மும்பை அணிக்கு 15.25 கோடி மிச்சம் உள்ளது

- வெ.அருண்குமார் 

 

 

Next Story

வந்தாங்க அடிச்சாங்க சூப்பர் ஓவர்.. ரிபீட்டு... த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

Published on 17/01/2024 | Edited on 19/01/2024
Vandanga Adichanga super over.. repeat... India won the thrill!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெய்ஸ்வால் 4, விராட் 0, சிவம் துபே 1, சாம்சன் 0 என் அடுத்தடுத்து வெளியேறினர். இந்திய அணி 22-4 என்று திணறி வந்தது. பிறகு வந்த ரிங்கு சிங், ரோஹித்துடன் இணைந்து பொறுமையாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் விளாசத் தொடங்கினர். பழைய ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் பந்துகளை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டபடி இருந்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங்கும் சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் டி20 போட்டிகளில் தனது 5 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இது உலக டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாகும். ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. அஹமது 3 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க இணை சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜத்ரானும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஒமர்ஜாய் ரன் எட்தும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நபியும், குலாபதினும் அதிரடி காட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒருவழியாக நபியை வாஷிங்டன் 34 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜனத் 2 ரன்னிலும், ஜத்ரான் 5 ரன்களிலும் வெளியேறினாலும் மறுபக்கம் குலாப்தின் தனது அதிரடியை குறைக்கவில்லை. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை முகேஷ் வீச வந்தார். கடைசி பந்து வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட 2 ரன்கள் எடுத்து சமன் செய்தனர். இதன் மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய வைத்தார் ரோஹித். குலாபதின் 1 ரன்னில் ரன் அவுட் ஆக நபி சிக்சர் உதவியுடன் ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றை என்ற இலக்குடன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 1, ஜெய்ஸ்வால் 1, அடுத்த  இரண்டு பந்தில் ரோஹித் சிக்சர் அடிக்க கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் சமன் ஆனது. 

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் ரிங்கு களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 6, அடுத்த பந்தில் 4 என அதிரடி காட்டினார். அடுத்து சிங்கிள் எடுக்க , அடுத்த பந்தில் ரிங்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் ரோஹித் ரன் அவுட் ஆக 11 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க மு்டிந்தது. பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த முறை ஸ்பின்னர் பிஷ்னோய் வீச வந்தார். முதல் பந்தில் நபியை ஆட்டமிழக்க செய்தார். அடுத்த பந்தில் ஜனத் 1 ரன் எடுக்க, 3 ஆவது பந்தில் குர்பாஸ் ஆட்டமிழக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

-வெ.அருண்குமார் 

Next Story

பழைய பன்னீர் செல்வமாக மாறிய ரோஹித்! சிக்சர் மழை பொழிந்த ரிங்கு!

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Rohit, who has become an old Panneer Selvam! Sixer Rained Ringu

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட், சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.  இந்திய அணி 22-4 என்று திணறி வந்தது.

பிறகு வந்த ரிங்கு சிங், ரோஹித்துடன் இணைந்து பொறுமையாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் இருவரும் விளாசத் தொடங்கினர். பழைய ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் பந்துகளை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்டபடி இருந்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங்கும் சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் டி20 போட்டிகளில் தனது 5 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இது உலக டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாகும். ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை இன்பத்தில் திளைக்க வைத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் 121 ரன்களும், ரிங்கு 69 ரன்களும் குவித்தன்ர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. அஹமது 3 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க இணை சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜத்ரானும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஒமர்ஜாய் ரன் எட்தும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் 13 ஓவர்களில் 102-3 என்று ஆடி வருகிறது.

- வெ.அருண்குமார்