sunil chhetri about sathankulam issue

Advertisment

சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணத்திற்கு, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுனில் சேத்ரி, "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாம் செய்யும் எதுவுமே அவர்களின் உயிரைத் திருப்பித் தராது, ஆனால் இந்த விவகாரத்தில் வழங்கப்படும் நீதி ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும், அது மிகவும் வலுவான இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.