Skip to main content

உலககோப்பைக்கு ரெஃப்ரியான ஐ.பி.எல் சர்ச்சை அம்பையர்...!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

2019-ம் ஆண்டு உலககோப்பை வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான ரெஃப்ரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுந்தரம் ரவி எனும் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தேர்வாகியுள்ளார். 

 

sundaram ravi a only indian umpire in ICC world cup 2019

 

இவர்தான் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த மும்பை - பெங்களூரு போட்டியில் மல்லிங்காவின் இறுதி பந்தின் ‘நோ பால்’ கொடுக்காமல் விட்டது. இதனால் இவர் பல விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டன் விரட் கோலி “நடுவர்கள் அவர்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்” என்றார். 
 

இவர் 2019-ம் ஆண்டுக்கான உலககோப்பை ரெஃப்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர்த்து ரெஃப்ரிகளில் இலங்கையிலிருந்து ரஞ்சன் மதுகல்லே இடம் பெற்று இருக்கிறார். இவருக்கு இது ஆறாவது உலககோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிறிஸ் பிராட் மற்றும் ஜெஃப் குரோவ் ஆகியோர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இது நான்காவது உலககோப்பை. மேலும் டேவிட் பூன், ஆண்டி பைக்ரோஃப்ட் மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எல்லம் ரெஃப்ரிகள் இவர்களை தவிர்த்து கள நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

ஒரு ஆட்டத்தை இடையில் நிறுத்துவது, நேரம் கடந்து ஆட்டம் போகும்போது அதற்கு அபராதம் விதிப்பது மற்றும் ஆட்டம் தொடர்பான பெரும் முடிவுகளை எடுப்பது ரெஃப்ரிகளின் பணி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

 

Next Story

‘நோ பால்’ தந்த அம்பயர்; ரசிகர் வெறிச்செயல்!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 odisha cuttack cricket no ball umpire issue

 

கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஒன்றில் நோ பால் என அம்பயர் கூறியதால் அவரை கொலை செய்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மன்ஹிசாலந்தா என்ற கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போது ஷங்கர்போர் மற்றும் பிரஹ்மபூர் என்ற இரு கிராமத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயான போட்டியின் போது அம்பயர் நோ பால் என அறிவித்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 

மேலும் இந்த வாக்குவாதம் தீவிரமானதால் அப்போது பார்வையாளராக இருந்த பிரஹ்மபூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்முதி ரஞ்சன் ரெளத் என்கிற முனா என்பவர் அம்பயரான லக்கி ரெளத்தை (வயது 22) தாக்கியிருக்கிறார். இதற்கு பதிலடியாக லக்கியும் ஸ்முதியை பேட்டால் தாக்கியிருக்கிறார். இதையடுத்து மோதல் அதிகரிக்கவே ஸ்முதி ரஞ்சன் தன்னிடம் இருந்த ஆயுதத்தால் அம்பயரை தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த லக்கியை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இந்த கொலைக்கு காரணமான ஸ்முதியை அங்கிருந்த கிரிக்கெட் வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

"சோகமான நாட்களில் ஒன்று" - ஜடேஜா ட்வீட்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

jadeja about worldcup 2019 semifinal loss

 

இன்றைய தேதி சோகமான நாட்களில் ஒன்றாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து. இந்த உலகக்கோப்பை தொடரில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா.

 

இந்நிலையில் இதனை நினைவுகூரும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜடேஜா, "வெற்றிபெற போராடினோம். ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டோம். சோகமான நாள்களில் ஒன்று" என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜா 77 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.