Skip to main content

வெயில் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா நியூஸிலாந்து ஆட்டம்...

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

hygg

 

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்றுவருகிறது. 157 ரன்களுக்கு  நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாலை நேர வெயில் நேராக வீரர்களின் கண்களில் பட்டு சரியாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தபட்டது. இந்திய அணியின் கிரிக்கெட் வரலாறிலேயே வெயில் காரணமாக ஒரு ஆட்டம் பாதியில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

 

 

Next Story

விராட்டின் சாதனைப் பட்டியலில் இணைந்த கில்; மூன்றாவது டி20யில் இந்தியா வெற்றி

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

Gill joins Virat's record list; India win third T20I vs newzealand

 

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற ராகுல் திரிப்பாதியுடன் சுப்மன் கில் இணைந்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறத்தில் திரிப்பாதியும் அடித்து ஆட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

 

திரிப்பாதி 44 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 24 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கில் அசத்தலாக சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.

 

235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற மிட்செல் மட்டும் பொறுமையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பின் வரிசையில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. 

 

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு டப்லினில் நடந்த ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதனையாக இருந்தது.

 

எதிரணியின் மொத்த ரன்களை விட தனிநபர் அதிக ரன்களை அடித்ததில் விராட்டின் சாதனைப் பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 111 ரன்களுக்கு சுருட்டியது. அதில் விராட் மட்டும் 122 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து 66 க்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் கில் 126 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

 

இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சதம் அடித்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

Next Story

இந்திய அணி போராடி வெற்றி; தொடரை தக்க வைத்தது

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

India win against newzealand in t20

 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி போராடி வென்றது.

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 176 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

 

இந்தியா - நியூசிலாந்து மோதும் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் சுப்மன் கில் 11 ரன்களிலும் இஷான் கிஷன் 19 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை விடுத்து பொறுமையாக ரன்களை சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 ரன்களை எடுத்தார்.