Skip to main content

ராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் என்று ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இனி வரும் ஆட்டங்களிலும் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

steve smith

 

கடந்த ஆண்டு ஐ.பில்.எல். போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே அணியை பிளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். அதனால் இந்த ஆண்டும் ரஹானேவே கேப்டனாக தொடர ராஜஸ்தான் நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.



ஆனால், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 6 தோல்விகள் அடைந்து. புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதனால் அந்த அணியின் நிர்வாகம் அதிரடியாக ரஹானாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை அமர்த்தியுள்ளது.

 

 

 

 

Next Story

பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான்; ஜெய்ப்பூரில் கிடைத்த இரண்டாவது வெற்றி!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc live score update rajasthan wins

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.  பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார்.

ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி துவக்கம் தந்த மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் டக் அவுட் ஆனார்.பின்னர் இணைந்த கேப்டன் பண்ட் நிதானம் காட்ட வார்னர் ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் வார்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில பந்துகளில் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் வீழ்ந்தார். பின்னட் வந்த ஸ்டப்ஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அபிஷேக் பொரேல் 9 ரன்னில் வெளியேற, அக்சர் படேல் வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட , பந்து வீச வந்த சந்தீப் சர்மா முதல் இரண்டு பந்துகளில் 6, 4 என ஸ்டப்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தனது அனுபவம் மூலம் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பந்து வீச வந்த ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஸ்டப்ஸ், அக்சரை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story

RR vs DC: பராக், அஸ்வின் அதிரடியால் பிழைத்த ராஜஸ்தான்!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc ipl score update parag played magnificent innings

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார். ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி 1 ஓவர் முடிவில் 2 ரன்கள் எடுத்துள்ளது.