Skip to main content

ஸ்டீவ் ஸ்மித் தலையைப் பதம் பார்த்த உதவியாளர்!!! அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல்..

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

steve smith

 

 

வலைப்பயிற்சியின்போது பயிற்சி உதவியாளர் எறிந்த பந்து ஸ்டீவ் ஸ்மித் தலையை பலமாக தாக்கியதால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இச்சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரரான ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. வலைப்பயிற்சியின் போது பயிற்சி உதவியாளர் எறிந்த பந்து அவரது தலையை பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூளை அதிர்ச்சி சோதனை செய்யப்பட இருக்கிறது. இச்சோதனை இரு கட்டமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவரால் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

Next Story

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

World Test Championship; Australian captain Smith on Indian team

 

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், பும்ராவுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இந்திய அணி குறித்து கூறியதாவது, “ஐபிஎல் போன்ற போட்டிகள் உலக அளவில் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றும் அழிவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம். இந்திய அணி தரமான மற்றும் கலவையான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது. முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையாகவே சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மொத்தமாக அவர்கள் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்றார்.

 

 

Next Story

என்னால் கடந்த இந்தியா டெஸ்ட் தொடரின் முடிவை மாற்றியிருக்க முடியும் - ஸ்டீவ் ஸ்மித்.

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
team india

 

 

இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

 

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், தன்னால் கடந்த 2018-19 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை ஒருவேளை தன்னால்  மாற்றிருக்க முடியும் என கூறியுள்ளார். அந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித், நான் கடந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடரை பாதிப்பாதியாக பார்த்தேன். அந்த தொடரில் களம் இறங்கி, அத்தொடரின் முடிவை மாற்றாமல் வெளியில் அமர்ந்து பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் ஒருவேளை என்னால்  அந்தத்  தொடரின் முடிவை மாற்றியிருக்க முடியும் என எனக்குத் தெரியும். இருந்தாலும், இப்போது ஒரு அட்டகாசமான தொடர் வருகிறது. நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். இந்திய அபாயகரமான ஒரு அணி. நம்பமுடியாத அளவிற்கு சிறந்த பேட்ஸ்மேன்களையும், சிறந்த பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது. நாங்களும் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளோம்" என செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.