Skip to main content

அன்று ஓட்டுனர் மகன்... இன்று உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு...

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான சிராஜ், உமேஷ் யாதவ், சவுதி ஆகியோரின் எகானமி ரேட் 10. அனைத்து தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் ஒரு பவுலர் மட்டும் விதிவிலக்காக அசத்தினார். 150 கிமீ வேகம், அதிக டாட் பால்கள், பர்பெக்ட் லைன் & லென்த், மிரட்டும் பவுன்சர்கள், சரியான விதத்தில் கன்ட்ரோல் என பவுலிங்கில் மாஸ் காட்டி இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, உலககோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நவ்தீப் சைனி ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

 

stats about cricket player navdeep saini

 

 

ஹரியானாவில் ஓட்டுனராக பணி புரிந்தவர் சைனியின் தந்தை. கிரிக்கெட் அகாடமியில் சேரும் அளவிற்கு அவரின் குடும்ப சூழ்நிலை அன்று இல்லை. இதனால் அதிகமாக டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார். அதன் மூலம் கிடைக்கும் ரூ.250 பணத்தை தன் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற பயன்படுத்தினார்.

உள்நாட்டு போட்டிகளுக்காக வலைப்பயிற்சிகளின்போது கவுதம் கம்பீருக்கு பந்துவீசியது சைனியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சைனியின் திறமையை கண்டு அசந்த கம்பீர், அவரை டெல்லி அணியில் சேர்க்க முற்பட்டார். ஆனால் தேர்வுக்குழு, சில வீரர்கள், பயிற்சியாளர் என பல தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு இருந்தது. சைனி ஹரியானாவை சேர்ந்தவர் என்பதால் அவரை வெளிமாநில வீரராக பார்த்தனர். ஆனால் கம்பீரின் விடா முயற்சியால் சைனி 2013-ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

2017-18-களில் ரஞ்சி டிராபி தொடரில் 34 விக்கெட்கள் எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தார். 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றபோதும்  ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு பெங்களூர் அணி 3 கோடிக்கு சைனியை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

டெல்லி அணிக்கு ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சைனி ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தார். அனுபவம் வாய்ந்த பவுலர்கள் அணியில் இடம் பெற்றதால் இளம் புதுமுக வீரரான சைனிக்கு அந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

 

stats about cricket player navdeep saini

 

 

இந்த வருடம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 35 கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் விதர்பா அணியுடன் 135 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார். 

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி முத்திரை பதித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஃபாஸ்ட் பவுலர்களில் அதிக விக்கெட்கள் எடுத்துள்ளார். சைனி 13 போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சைனி இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளே ஓவர்களில் 23 ஓவர் பவுலிங் செய்து 69 டாட் பால்கள் வீசியுள்ளார். 

மிடில் ஓவர்களில்(7 – 16) 33 டாட் பால்கள் மற்றும் எகானமி ரேட் 7.33. டெத் ஓவர்களில்(17 – 20) 9.30 எகானமி ரேட், 33 டாட் பால்கள், 8 விக்கெட்கள். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து இளம் வீரர் ஆர்ச்சர் டெத் ஓவரில் 9.70 எகானமி ரேட், 26 டாட் பால்கள், 7 விக்கெட்கள்.

இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் டாட் பால்களில் பும்ராவின் சராசரியை விட சைனியின் சராசரி அதிகம். சைனி 13 போட்டிகளில் 141 டாட் பால்கள் வீசியுள்ளார். பும்ராவின் டாட் பால்கள் 15 போட்டிகளில் 156, சராசரியாக ஒரு போட்டிக்கு 10.4 டாட் பால்கள். சைனி சராசரியாக ஒரு போட்டிக்கு 10.8 டாட் பால் வீசியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் சைனி மட்டுமே அதிக டாட் பால்கள் வீசிய வீரர்களின் டாப் 10 இடத்தில் உள்ளார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக பவுலிங் செய்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் சைனி மட்டுமே முதல் 20 இடத்திற்குள் உள்ளார். 

டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியுள்ளார் சைனி. சைனி பவுலிங்கில் தோனி 11 பந்துகள் சந்தித்து 14 ரன்கள், ரிஷாப் பண்ட் 2 பந்துகளில் 2 ரன்கள், இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த ஹிட்டரான ரஸ்ஸல் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 

பல ஆண்டுகளாக பலவீனமாக இருந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தற்போது பும்ரா, புவனேஷ் மற்றும் சமி ஆகியோரால் பலமாக மாறியுள்ளது. இந்த நிலையில் சைனியின் வருகை கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 


 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

CSK vs RCB: ராவத் - தினேஷ் இணை அதிரடியால் பெங்களூரு ரன்கள் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
CSK vs RCB ipl latest live score update

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.

தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது.  கோலி 21 ரன்களுக்கும்,  கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.  மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத்  48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.