Skip to main content

தந்தையானார் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

Natarajan

 

சேலத்தை பூர்வீகமாக கொண்ட தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நடராஜன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 

கடந்த 2018-ம் ஆண்டு நடராஜன்-பவித்ரா தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடராஜன் அமீரகம் கிளம்பியபோது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், இத்தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.